சென்னை : மார்ச் 31, 2025

வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை முன்வைத்து பூத் கமிட்டி மற்றும் பூத் ஏஜென்ட்கள் நியமிப்பது தொடர்பாகவும் மற்றும் புதிய உறுப்பினர்களை இணைக்கவும் சிறப்பு முகாம் நடத்துவது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. துணைத்தலைவர் திரு. A.G.மௌரியா (Rtd IPS), மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நாகராஜன், சென்னை மண்டல செயலாளர் திரு.மயில்வாகனன், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்க இந்த ஆலோசனை கூட்டத்தினை ராயபுரம் ம.நீ.ம மாவட்ட செயலாளர் திரு.கமல் மாறன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர்.

“மக்கள் நீதி மய்யம் கட்சியின் இராயபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது ஆலோசனையின்பேரில், இராயபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

கட்சியின் துணைத் தலைவர் திரு.A.G.மௌரியா (Rtd IPS) அவர்கள் தலைமையில், நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நாகராஜன், சென்னை மண்டலச் செயலாளர் திரு.மயில்வாகனன், வழக்கறிஞர் அணி சென்னை மண்டல அமைப்பாளர் திரு.சேகர் கண்ணப்பன், பொறியாளர் அணி மண்டல அமைப்பாளர் திரு.சரவணகுமார், மாநில இணைச் செயலாளர் திரு.M.K.S.சுரேஷ் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் திரு.கமல் மாறன் அவர்கள் செய்திருந்தார்.

மாவட்டச் செயலாளர் திரு. C.கோமகன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் திரு. விம்கோ குமரன், தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு. J.ராம் சேகர், ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணி மாவட்ட அமைப்பாளர் திரு. ஓ.ராஜா, மாணவரணி மாவட்ட அமைப்பாளர் செல்வி J.ஜெயந்தி, மாவட்டப் பொருளாளர் திரு. பாலகுரு, மாவட்டத் துணைச் செயலாளர் திரு. கவிராஜ், மாணவரணி மாவட்ட துணை அமைப்பாளர் திரு. M.சந்துரு, கிளை அமைப்பாளர் செல்வி D.J.நீலா, மாநகரச் செயலாளர்கள் திரு. D.டில்லி மகாராஜா, திருமதி. மலர்விழி பரந்தாமன், திரு. இக்னேஷியஸ், திரு. சந்திரஹாசன், திரு. கங்காதரன், வட்டச் செயலாளர்கள் திரு. A.ஆர்தர் பாபு, திரு. உதயகுமார், திரு. கோவிந்தராஜ், திரு. S.மைக்கேல், திரு. A.ராஜா, திரு. காமராஜ், திரு. A.இளவரசு, திரு. C.சுரேஷ், கிளைச் செயலாளர்கள் திரு. ராஜா, திரு. சீனிவாசன், திரு. பரந்தாமன், திரு. L.ராஜா, திரு. P.பரந்தாமன், திரு. சீனி கமல், திரு. J.ஜார்ஜ் பாலு, திரு. சாமியார் ராஜா, சிறப்பு விருந்தினர்கள் திரு. D.மதன், திரு. A.மின்ட் அகஸ்டின், திரு. பிரேம், மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள், பூத் கமிட்டி நியமனம், புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. – மக்கள் நீதி மய்யம்

நன்றி : மக்கள் நீதி மய்யம்