மக்கள் நீதி மய்யம் கட்சியை பாஜகவின் B-Team என்று தொடர்ச்சியாக திமுக குற்றம் சாட்டுகிறது. மக்கள் நீதி மய்யமம் தலைவர் கமல் ஹாசன் அவர்களும் பாஜக ஆட்சியின் செயல்பாடுகளையும் பாஜகவின் மற்றும் RSS சித்தாந்தத்தையும் எதிர்த்து பல முறை குரல் கொடுத்ததுண்டு. அதன் தொகுப்பு இங்கு உங்கள் பார்வைக்கு.
கடந்த நான்காம் தேதியன்று பாராளுமன்ற ராஜ்ய சபையில் நடைபெற்ற நிகழ்வின் போது மக்கள் நீதி மய்யம் தலைவரும் ராஜ்ய ரபா உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் மிக முக்கியமான தகவல் ஒன்றை முன்வைத்தார். அப்போதிருந்து அடுத்தடுத்த நாட்களில் நாடெங்கிலும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டில் நடைபெற்ற விவாதத்தின்போது நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழ் குறித்த தகவல் ஒன்றை தமிழ் கற்றுக் கொண்டால் அதை வைத்து பிச்சை கூட எடுக்க முடியாது என விடுதலை நாளேட்டில் 1943 இல் தந்தை பெரியார் அவர்கள் எழுதியதாக போகிறபோக்கில் பேசிவிட்டு சென்று விட்டார். அப்போது பல்வேறு விவாதங்கள் நடைபெற்ற போதிலும் காலப்போக்கில் மறந்து விட்டனர்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் கடந்த ஆண்டு மே மாதம் ராஜ்ய சபா உறுப்பினராக உயிரே உறவே தமிழே என்று துவங்கி கமல்ஹாசன் ஆகிய நான் என கர்ஜிக்கும் குரலில் தூய தமிழில் பதவியேற்றார். அதன் பிறகு கேள்வி நேரத்தில் எத்தனால் உள்ள எரிபொருள் நிரப்புவதும் அதனால் பயணிக்கும் தூரமும் என்ஜின்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த மிக முக்கிய கருத்தை முன் வைத்த போதும் அது நாடெங்கிலும் பெரும் விவாதத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
கடந்த நான்காம் தேதியன்று பிரதமர் மற்றும் நிதியமைச்சர் சபைக்கு வரவில்லை எனினும் தனக்கு அளிக்கப்பட்ட நேரத்தில் நிர்மலா சீதாராமன் தமிழ் குறித்து தரக்குறைவாக பேசியதை எடுத்துரைத்து பல்வேறு உதாரணங்களை அடுக்கடுக்காக எடுத்துரைத்து இறுதியாக தமிழை வைத்து தமிழன் எங்கும் பிச்சை எடுக்க மாட்டான் இன்னும் சொல்லப்போனால் உங்களிடம் எந்த தமிழனும் பிச்சையே எடுக்க மாட்டான் என முத்தாய்ப்பாக சொல்லவே நாடு முழுவதும் பெரும் தமிழ் தீ பரவியது. தமிழகம் முழுவதிலும் கமல்ஹாசன் அவர்களின் கருத்திற்கு பெரும் ஆரவாரத்துடன் பகிர்ந்து கொண்டார்கள். இது போன்ற துணிச்சல் மிக்க கருத்தை எந்த தயக்கமுமின்றி எடுத்துரைக்க நம்மவருக்கு நிகர் நம்மவர் மட்டுமே.
திரு.கமல்ஹாசன் அவர்களின் கருத்தினை ஆமோதித்து திராவிடர் கழகத்தின் பொதுசெயலாளர் திரு.கி.வீரமணி அவர்கள், தந்தை பெரியார் பற்றி நிதியமைச்சர் பேசியதற்கு கண்டனமும் விடுதலை நாளேட்டில் பிப்ரவரி 7 ஆம் தேதியன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தென்னகத்து காந்தி என்று அழைக்கப்பட்டவர் பேரறிஞர் அண்ணா துரை அவர்கள். திராவிட கோட்பாடுகளை மக்களிடையே முன்னெடுத்துச் சென்று சேர்த்த மிக முக்கிய மூத்த அரசியல் தலைவர். அரசியலில் ஈடுபட்டது முதல் இறுதிவரை அப்பழுக்கற்ற ஓர் அரசியல் களத்தில் வீறு நடை போட்டவர்.
தனது இளம் வயதில் நீதிக் கட்சியில் இணைந்து செயலாற்றி வந்த அண்ணா அவர்கள் தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரை தனது தலைவராக ஏற்றுக் கொண்டவர் இந்தி மொழி திணிப்பை ராஜாஜி ஆட்சிக்காலத்தில் அமல்படுத்த முயன்றபோது பெரியாருடன் இணைந்து தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களுக்கு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் அண்ணாவிற்கு பெரும் பங்குண்டு. தமிழகத்தில் வேற்று மொழிகளின் ஆதிக்கம் காலூன்றி விடக்கூடாது என்று மிக உறுதியாக இருந்தார்.
வாக்கரசியலில் ஈடுபாடு கொண்டமையால் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து தமது சக தோழர்களுடன் இணைந்து திராவிடர் முன்னேற்ற கழகம் எனும் கட்சியை தோற்றுவித்து படிப்படியாக அரசியலை மக்களிடையே கொண்டு சேர்த்து 1967 இல் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தார். முதல் தீர்மானமாக சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்றம் செய்து அரசாணையை வெளியிட்டு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார். மிகச்சிறந்த பேச்சாளரும், இதழாளரும் ஆன அண்ணா அவர்கள் இருமொழிக் கொள்கை, சுயமரியாதை திருமணங்கள், கலப்புத் திருமணங்கள் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி ஆட்சி செய்து வந்த அண்ணா நோய்வாய்ப்பட்டு அயல்நாட்டிற்கு சென்று சிகிச்சைகள் மேற்கொண்டும் சிகிச்சைகள் பலனளிக்காமல் 1969 இயற்கை எய்தினார்.
தமிழகத்தை ஆட்சி செய்த முதல்வர்களில் வரலாற்றில் சிறந்த பெயரெடுத்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
"கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்தி, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்றுரைத்த அறிஞர் அண்ணாவின் நினைவு நாளில், அவரை போற்றிய மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள்" - மக்கள் நீதி மய்யம்
‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்றார். ‘மாநிலக் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும்’ என்று சொல்லி அதை நடத்திக் காட்டினார். ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்கிற முழக்கத்தால் இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்தினார். இப்பெரும் செயல்களைச் சாதித்த அறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இன்று. அவரைப் போற்றுவோம். - திரு.கமல்ஹாசன்
பிப்ரவரி 07, 2026 கடந்த நான்காம் தேதியன்று பாராளுமன்ற ராஜ்ய சபையில் நடைபெற்ற நிகழ்வின் போது மக்கள் நீதி மய்யம் தலைவரும் ராஜ்ய ரபா உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் மிக முக்கியமான தகவல் ஒன்றை முன்வைத்தார். அப்போதிருந்து அடுத்தடுத்த நாட்களில் நாடெங்கிலும்
டிசம்பர் : 25, 2025 மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) காந்தியடிகளின் பெயரை நீக்கி சட்டமியற்றியுள்ள ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், நேற்று திருச்சி மண்டலத்திற்குட்பட்ட, நாகை,
டிசம்பர் : 25, 2025 மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) காந்தியடிகளின் பெயரை நீக்கி சட்டமியற்றியுள்ள ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், நேற்று கோவை மண்டலத்திற்குட்பட்ட, பவானி,
டிசம்பர் 24, 2025 கடந்த காங்கிரஸ் கூட்டணியின் அரசால் அறிமுகம் செய்யப்பட்ட நூறு நாள் வேலை திட்டத்திற்கு அண்ணல் காந்தியடிகள் பெயர் சூட்டட்பட்டு அமலில் இருந்து வந்தது. ஊரக வேலைவாய்ப்பு, சுயநிறைவு, கைத்தொழில், கிராம சுயாட்சியை மையமாக வைத்து அவர் முன்வைத்த
டிசம்பர் : 17, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திரு.கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பாசிச பாஜகவை கண்டித்து மாபெரும் தெருமுனை கூட்டம் மதுரையில் நடைபெற்றது. “பாசிச பா.ஜ.க-வைக் கண்டித்து, மதுரை – தினமணி திரையரங்கம் (TMS
நவம்பர் 02, 2025 திராவிட முன்னேற்றக் கழக தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற, SIR க்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் MP அவர்களின்
ஆகஸ்ட் 28, 2025 ஒரு சில நாட்களுக்கு முன்னர் தங்களது நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரிகளை 50% அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்கள் விதித்துள்ளது எதிர்பாராத ஒன்று. இதனால் உண்டான சுணக்கம் திருப்பூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள
சென்னை : மார்ச் 05, 2025 பதிவு புதுப்பிக்கப்பட்டது மார்ச் 07, 2025 ஆளும் ஒன்றிய அரசின் அமைச்சரவையில் வருகின்ற 2026 ஆண்டில் பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு பணிகள் இயற்ற பணிகள் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது. அவசியமற்ற மறுசீரமைப்பு தெற்கில்
டிசம்பர் 19, 2024 ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட திட்டத்திற்கான அரசியல் சாசனத்தில் 129 ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் ஒன்றிய அரசின் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று மதியத்திற்கு மேல் தாக்கல் செய்தார். அதன்
கோவை : ஏப்ரல் 16, 2024 (Updated 17.04.2024) மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு தற்போது கோவை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார். அதன் நேரலை ஒளிபரப்பின் லிங்க் வெளியிட்டுள்ளது மக்கள் நீதி மய்யம்
கோவை : ஏப்ரல் 14, 2024 (Updated Arpil 15, 2024) இன்னும் சில நாட்களில் நடக்கவிருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்
சென்னை – மார்ச் 24, 2024 வருகின்ற ஏப்ரல் மாதம் தேதியன்று நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் இன்று (24.03.2024) சென்னை தி.நகரில் உள்ள தனியார் அரங்கில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் துணைத்தலைவர்கள்,
சென்னை : மார்ச் 22, 2024 நேர்மை ஒன்றையே முக்கிய குறிக்கோளாக தனித்தன்மையுடன் துவங்கிய கட்சி மக்கள் நீதி மய்யம், இதற்கு முன்னர் நீங்கள் குறைகூறிய கட்சியுடனே கூட்டணி அமைத்து விட்டீர்களே என குற்றம் சுமத்தும் அந்த நபர்களுக்கு நான் சொல்லிக்
சென்னை : மார்ச் 20, 2024 ஆளும் ஒன்றிய அரசைச் சேர்ந்த பெண் அமைச்சர்கள் இருவர் நிர்மலா சீதாராமன் மற்றும் திரைப்பட நடிகை குஷ்பு ஆகிய இருவரும், நமது தமிழக பெண்களை கேவலமான தொனியில் அதாவது கடந்த ஆண்டில் தாக்கிய மிக்ஜாம்
சென்னை : மார்ச் : 15, 2024 தூத்துக்குடி செம்பு உருக்காலையான ஸ்டெர்லைட் மூடப்பட்டதை மீண்டும் திறக்க வேதாந்த நிறுவனம் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்றதையடுத்து அப்பகுதி மக்கள் அனைவரும் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு மீண்டும் திறக்கக்கூடாது என போராட்டம் செய்தனர்
சென்னை : மார்ச் – 12, 2024 குடியுரிமைச் சட்டம் திருத்தும் செய்த மசோதாவை இன்று அமல்படுத்தியுள்ளது குறித்து தனது கடும் கண்டனத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் நீண்ட அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளார். “தேர்தலுக்காக பொதுமக்களைப் பிளவுபடுத்தி
பிப்ரவரி 15, 2024 தேசிய மற்றும் மாநில கட்சிகள் பலவும் கட்சி வளர்ச்சிக்கென நன்கொடைகள் பெற்றுக்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. பெரும் நிறுவனங்கள் இங்குள்ள கட்சிகளுக்கு அவ்வப்போது நிதிகளை தருவதும் குறிப்பாக தேர்தல்கள் நடைபெறும்போது நிறுவனத்தின் சார்பாக நன்கொடைகள் வழங்குவார்கள். அப்படி
ஆகஸ்ட் : 26, 2௦23 மத்திய அரசின் இந்தித் திணிப்பிற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்! தேசிய தொழில்நுட்ப கழக பணி நியமன அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல். துணைத் தலைவர் திரு. தங்கவேலு அவர்கள் அறிக்கை. தேசிய தொழில்நுட்பக் கழகக்
ஆகஸ்ட் 08, 2023 இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 3 மாதங்களாக இரு சமூகத்தினரிடையே நடந்த மோதல் குறித்து பல கட்டுரைகளில் தொடர்ச்சியாக எழுதி இருந்தோம். நாடெங்கிலும் இது குறித்து கவலையடைந்துள்ளனர். மதவாதத்தின் மொத்த உருவமாக ஆளும் கட்சி உருவெடுத்து நிற்கிறதோ
சென்னை : ஆகஸ்ட் 03, 2023 பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலமான மணிப்பூரில் இரு சாராருக்கும் ஏற்பட்ட மோதல் 80 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது இதனை கொஞ்சமும் சட்டை செய்யாமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வரும் ஆளும் மத்திய
சென்னை : ஆகஸ்ட் ௦1, 2௦23 இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக அங்கே வாழும் இரண்டு சமூகத்தினரிடையே எழுந்த மோதலால் பெரும் கலவரங்களுக்கு இரையாகிப் போனது. கடந்த மே மாதத்தில் ஓர் நாள் சிறுபான்மை
ஜூலை 25, 2௦23 பற்றி எரியுது மணிப்பூர். இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இரண்டு சமூகத்தினரிடையே தொடங்கிய மோதல் சுமார் எழுபது நாட்களைக் கடந்தும் தொடர்கிறது. ஏன் என அம்மாநிலத்தில் ஆளும் பாஜக தலைமையிலான அரசை நோக்கி எந்தக்
கோவை – ஜூலை 17, 2023 கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பிஜேபி யை சேர்ந்த திருமதி வானதி ஸ்ரீநிவாசன் தொகுதியில் எந்த திட்டங்களையும் சரிவர நிறைவேற்றித் தரவில்லை என பொதுமக்களிடமிருந்து எழுந்த ஆதங்கம் குறித்து அறிந்த மக்கள் நீதி
கோவை : ஜூலை 13, 2௦23 கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பாக, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி.வானதி சீனிவாசன் அவர்கள் 2021 தேர்தலில், தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து, வருகின்ற 16ம் தேதி
ராசிபுரம் : ஜூன் 20, 2023 நாமக்கல் நிழக்கு மாவட்டம் ராசிபுரத்தில் மக்கள் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுக்கூட்டம் சிறப்பாக நடத்தப்பட்டது. துனைத்தலைவர்களான திரு மௌரியா அவர்களும் மற்றும் திரு தங்கவேலு அவர்களும் தலைமை தாங்கினர். மாநில இளைஞரணி செயலாளரான