மய்யத்தின் பாஜக எதிர்ப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சியை பாஜகவின் B-Team என்று தொடர்ச்சியாக திமுக குற்றம் சாட்டுகிறது. மக்கள் நீதி மய்யமம் தலைவர் கமல் ஹாசன் அவர்களும் பாஜக ஆட்சியின் செயல்பாடுகளையும் பாஜகவின் மற்றும் RSS சித்தாந்தத்தையும் எதிர்த்து பல முறை குரல் கொடுத்ததுண்டு. அதன் தொகுப்பு இங்கு உங்கள் பார்வைக்கு. 

  • தேசம் காத்திட வாக்களித்தோம் : மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் வாக்களித்தார்

    சென்னை " ஏப்ரல் 19, 2024

    மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் தேர்தல் நாளன்று தனது வாக்கினை செலுத்துவதில் இருந்து கடமை தவறியதில்லை. படப்பிற்கென அயல்நாடுகளுக்கு சென்றிருந்தாலும் வாக்குப்பதிவன்று நிச்சயம் ஆஜராகி வாக்கினை செலுத்து தமது கடமையை நிறைவு செய்வார். அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஆண்டும் இந்திய தேர்தல் ஆணையம் புதிய வாக்காளர்கள் சேர்க்கை, முகவரி மாற்றம் போன்றவைகளை செய்திட தேவையான கால அவகாசம் தருவார்கள். அது குறித்த அறிவிப்பினை தானும் பொதுமக்களுக்கு தெரிவிப்பார். மேலும் தேர்தல் நடைபெறவிருக்கும் நேரங்களில் அதற்கு முன்னதாக தங்களது வாக்காளர் அடையாள அட்டையை புதுப்பித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தேசிய வாக்காளர் தினம் அன்று கானொளியில் தோன்றி பொதுமக்களிடம் இன்றைக்கு என்ன நாள் என்றும் குறிப்பிட்டு பேசி, வாக்களிப்பதன் கடமை என்னவென்பதையும், வாக்களிக்காமல் இருப்பது பெருங்குற்றம் என்றும் ஆலோசனை அளிப்பார். மேலும் பதினெட்டு பூர்த்தியானால் முறையாக தத்தமது பகுதிகளில் உள்ள தேர்தல் அலுவலகம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவு செய்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்வார்.

    கொடிபிடித்து கோஷம் எழுப்பும் போராட்டங்கள் எதுவும் எதையும் அவ்வளவு எளிதாக மாற்றிவிடாது எனவும் கருதுபவர். ஆயினும் எந்த இடர்கள் என்றாலும் அதனை சட்டபூர்வமாக மட்டுமே சந்திக்க வேண்டும் அதன் மூலமே நமக்கான சமதர்ம நீதியை பெற முடியும் என்றும் அடிக்கடி சொல்வார்.

    இந்தியாவின் பிரபல திரைக்கலைஞராக இருந்தாலும் வாக்களிப்பதன் அவசியம் உணர்த்தும் நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் இன்றைக்கு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் தனக்கான வாக்கினை தேனாம்பேட்டையில் உள்ள தேர்தல் வாக்கு மையத்தில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று செலுத்தினார். வாக்குச்சாவடியினுள் அமையப்பெற்ற வாக்கு இயந்திரத்தினை முழுமையாக பார்வையிட்டு வாக்கினை செலுத்திவிட்டு செலுத்தியபின் உண்டாகும் பீப் ஒலி ஒலித்ததை உறுதிசெய்துகொண்டு பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.

    https://twitter.com/ikamalhaasan/status/1781229280627937464

    https://twitter.com/PTTVOnlineNews/status/1781197293556846903
    https://twitter.com/CentristPulse/status/1781178397210931381
    https://twitter.com/SaiPozhilan/status/1781196400287736139
    https://twitter.com/nammavar11/status/1781185093480198538
    https://twitter.com/sunnewstamil/status/1781183398478065701

  • தேசம் தலைநிமிர வரும் வாக்குப்பதிவு நாளில் தவறாமல் வாக்களிப்போம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் அழைப்பு

    ஏப்ரல் 17, 2024 (Updated 19.04.2024)

    தேதி அறிவிக்கப்பட்டவுடன் பரபரப்பு தொற்றிக்கொள்ள பல கட்சிகளும் களத்தில் இறங்கின. மும்முரமாக பிரச்சாரங்களை துவங்கி ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி தெளித்து வந்தன. அவற்றில் எது சரியென, அவற்றில் எதை நிறைவேற்ற சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதையும் தீர ஆராய்ந்து வாக்களிப்பது நமது கடமை. குறிப்பாக நீங்கள் கவனிக்க வேண்டியது சாதியோ, மதமோ முக்கியம் என சொல்லும் கட்சிகள் அதனை சார்ந்த கூட்டணி கட்சிகள் மற்றும் அமைப்புகள் என எவற்றையும் சுலபமாக மறுக்கலாம் அதில் எந்த தவறும் இல்லை. மதத்தை முன்னிலைபடுத்தி அரசியலில் ஆட்சியில் புகுத்திய பல நாடுகள் பெரும் சிக்கலில் உள்ளாகி சிதைந்து நின்ற வரலாறுகள் உண்டு. சகோதரத்துவம், சமத்துவம், மதச்சார்பற்ற அணுகுமுறை, தனிப்பட்ட நபரின் வாழ்வியல் சுதந்திரம் அதில் மத்திய மாநில அரசுகள் ஒருபோதும் தலையிட எந்த உரிமையும் கிடையாது. உண்ணுவது, உடையணிவது, திருமணம், கருத்தியல் என எதிலும் ஆளும் அரசுகளும் சரி வேறு எந்த அமைப்புகளும் தங்களின் மூக்கை நுழைப்பது கிஞ்சித்தும் ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று. ஒருவேளை தலையீடு உள்ளதென்றால் அதனை சகித்துக்கொள்ளவும் வேண்டியதில்லை.

    எல்லாவற்றுக்கும் மேலாக சிறந்த கட்டமைப்பு, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, மருத்துவம், கல்வி, பெண்களின் பாதுகாப்பு, நீர் மேலாண்மை, இயற்கை பேரிடர்களை திறம்பட கையாளுதல், முறையான வங்கி சேவைகள், தெளிவான நேர்மையான அரசு நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் நிர்வாகம் என பல வழிகளில் சிறப்பான ஆட்சியைத் தரவல்ல கட்சியை/கூட்டணியை ஆதரவளித்து வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

    எனவே வாக்களிக்க தேவையான தகுதியை கொண்ட ஒவ்வொரு வாக்காளரும் தவறாமல் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுமாறு மக்கள் நீதி மய்யம் கேட்டுக் கொள்கிறது.

    "நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நம் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர், நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள், திமுக மற்றும் அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுக்கான 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை ஈரோட்டில் துவங்கி, நேற்று கோயம்புத்தூர் ராஜவீதியில் மிகச்சிறப்பாக நிறைவடைந்தது. தேர்தல் பயணத்துக்கு முந்தையக் கூட்டத்தில் தலைவர் கூறியது போல, சென்ற இடமெல்லாம் மக்களின் அன்பும் ஆதரவும் நம்மை நெகிழச்செய்தது. நம் வருங்கால இந்தியாவை கட்டமைக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவர் முன்னும் விதைக்கப்பட்டிருக்கிறது என்ற தலைவரின் கூற்றை கருத்தில் கொண்டு, தலைவர் வழிநின்ற மக்கள் நீதி மய்யத் தொண்டர்கள் ஒவ்வொருவரும், துளியும் சுயநலமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தலைவரின் கருத்தை கொண்டு சேர்த்தனர். தேசம் தலைநிமிர வரும் வாக்குப்பதிவு நாளில் (19.04.2024) தவறாமல் வாக்களிப்போம்."

    நாளை நமதே !

    https://twitter.com/maiamofficial/status/1780578111261639027

    நன்றி : மக்கள் நீதி மய்யம்


    #KamalHaasan
    #MakkalNeedhiMaiam #Election2024

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கானப் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் : தலைவர் திரு.கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது

சென்னை – மார்ச் 24, 2024 வருகின்ற ஏப்ரல் மாதம் தேதியன்று நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் இன்று (24.03.2024) சென்னை தி.நகரில் உள்ள தனியார் அரங்கில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் துணைத்தலைவர்கள்,

மேலும் படிக்க »

குற்றம் கடிதலுக்கு இதுவல்ல நேரம் – பாசிசம் அகற்றுவதே இப்போதைய தேவை – மய்யத் தலைவர் கமல்ஹாசன்

சென்னை : மார்ச் 22, 2024 நேர்மை ஒன்றையே முக்கிய குறிக்கோளாக தனித்தன்மையுடன் துவங்கிய கட்சி மக்கள் நீதி மய்யம், இதற்கு முன்னர் நீங்கள் குறைகூறிய கட்சியுடனே கூட்டணி அமைத்து விட்டீர்களே என குற்றம் சுமத்தும் அந்த நபர்களுக்கு நான் சொல்லிக்

மேலும் படிக்க »

தமிழக பெண்களை தரம்தாழ்த்தி விமர்சிக்கும் பாஜக பெண் அமைச்சர்களுக்கு கண்டனம் – மக்கள் நீதி மய்யம் தலைவர்

சென்னை : மார்ச் 20, 2024 ஆளும் ஒன்றிய அரசைச் சேர்ந்த பெண் அமைச்சர்கள் இருவர் நிர்மலா சீதாராமன் மற்றும் திரைப்பட நடிகை குஷ்பு ஆகிய இருவரும், நமது தமிழக பெண்களை கேவலமான தொனியில் அதாவது கடந்த ஆண்டில் தாக்கிய மிக்ஜாம்

மேலும் படிக்க »

நம்மவரை சந்தித்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்ட குழுவினர்

சென்னை : மார்ச் : 15, 2024 தூத்துக்குடி செம்பு உருக்காலையான ஸ்டெர்லைட் மூடப்பட்டதை மீண்டும் திறக்க வேதாந்த நிறுவனம் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்றதையடுத்து அப்பகுதி மக்கள் அனைவரும் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு மீண்டும் திறக்கக்கூடாது என போராட்டம் செய்தனர்

மேலும் படிக்க »

தேர்தலுக்காக இறையாண்மையைச் சிதைக்கும் மத்திய அரசு ! – மக்கள் நீதி மய்யம் தலைவர் சாடல்

சென்னை : மார்ச் – 12, 2024 குடியுரிமைச் சட்டம் திருத்தும் செய்த மசோதாவை இன்று அமல்படுத்தியுள்ளது குறித்து தனது கடும் கண்டனத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் நீண்ட அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளார். “தேர்தலுக்காக பொதுமக்களைப் பிளவுபடுத்தி

மேலும் படிக்க »

Electoral Bonds தடை-வரலாற்றுத் தீர்ப்பை வரவேற்கிறேன் : ம.நீ.ம தலைவர் திரு.கமல்ஹாசன்

பிப்ரவரி 15, 2024 தேசிய மற்றும் மாநில கட்சிகள் பலவும் கட்சி வளர்ச்சிக்கென நன்கொடைகள் பெற்றுக்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. பெரும் நிறுவனங்கள் இங்குள்ள கட்சிகளுக்கு அவ்வப்போது நிதிகளை தருவதும் குறிப்பாக தேர்தல்கள் நடைபெறும்போது நிறுவனத்தின் சார்பாக நன்கொடைகள் வழங்குவார்கள். அப்படி

மேலும் படிக்க »

தேசிய தொழில்நுட்ப கழக பணி நியமனம்-மத்திய அரசின் இந்தி திணிப்பு : ம.நீ.ம கண்டனம்

ஆகஸ்ட் : 26, 2௦23 மத்திய அரசின் இந்தித் திணிப்பிற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்! தேசிய தொழில்நுட்ப கழக பணி நியமன அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல். துணைத் தலைவர் திரு. தங்கவேலு அவர்கள் அறிக்கை. தேசிய தொழில்நுட்பக் கழகக்

மேலும் படிக்க »

மணிப்பூரும் இந்தியாவின் ஓர் மாநிலமே ; புறக்கணிப்பது ஏன் மய்யத்தலைவர் கேள்வியும் கண்டன ஆர்ப்பாட்டமும்

ஆகஸ்ட் 08, 2023 இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 3 மாதங்களாக இரு சமூகத்தினரிடையே நடந்த மோதல் குறித்து பல கட்டுரைகளில் தொடர்ச்சியாக எழுதி இருந்தோம். நாடெங்கிலும் இது குறித்து கவலையடைந்துள்ளனர். மதவாதத்தின் மொத்த உருவமாக ஆளும் கட்சி உருவெடுத்து நிற்கிறதோ

மேலும் படிக்க »

மணிப்பூர் கலவரம் : பொறுப்பற்ற மத்திய அரசைக் கண்டித்து மய்யம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

சென்னை : ஆகஸ்ட் 03, 2023 பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலமான மணிப்பூரில் இரு சாராருக்கும் ஏற்பட்ட மோதல் 80 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது இதனை கொஞ்சமும் சட்டை செய்யாமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வரும் ஆளும் மத்திய

மேலும் படிக்க »

இந்தியாவின் தலைமகன் பிரதமர் அவர்கள் மணிப்பூர் செல்லத் தயங்குவதேன் ? மக்கள் நீதி மய்யம் கேள்வி

சென்னை : ஆகஸ்ட் ௦1, 2௦23 இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக அங்கே வாழும் இரண்டு சமூகத்தினரிடையே எழுந்த மோதலால் பெரும் கலவரங்களுக்கு இரையாகிப் போனது. கடந்த மே மாதத்தில் ஓர் நாள் சிறுபான்மை

மேலும் படிக்க »

புறக்கணிக்கப்பட்ட மணிப்பூர், மறுக்கப்பட்ட மனிதநேயம்!

ஜூலை 25, 2௦23 பற்றி எரியுது மணிப்பூர். இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இரண்டு சமூகத்தினரிடையே தொடங்கிய மோதல் சுமார் எழுபது நாட்களைக் கடந்தும் தொடர்கிறது. ஏன் என அம்மாநிலத்தில் ஆளும் பாஜக தலைமையிலான அரசை நோக்கி எந்தக்

மேலும் படிக்க »

என்னாயிற்று தேர்தல் வாக்குறுதிகள் : கேட்டது கோவை தெற்கு மக்கள் நீதி மய்யம்

கோவை – ஜூலை 17, 2023 கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பிஜேபி யை சேர்ந்த திருமதி வானதி ஸ்ரீநிவாசன் தொகுதியில் எந்த திட்டங்களையும் சரிவர நிறைவேற்றித் தரவில்லை என பொதுமக்களிடமிருந்து எழுந்த ஆதங்கம் குறித்து அறிந்த மக்கள் நீதி

மேலும் படிக்க »

கோவை தெற்கு MLA வானதி ஸ்ரீநிவாசன் : செயல்படாத சட்டமன்ற உறுப்பினர் – மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

கோவை : ஜூலை 13, 2௦23 கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பாக, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி.வானதி சீனிவாசன் அவர்கள் 2021 தேர்தலில், தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து, வருகின்ற 16ம் தேதி

மேலும் படிக்க »

நாமக்கல் ராசிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டம்

ராசிபுரம் : ஜூன் 20, 2023 நாமக்கல் நிழக்கு மாவட்டம் ராசிபுரத்தில் மக்கள் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுக்கூட்டம் சிறப்பாக நடத்தப்பட்டது. துனைத்தலைவர்களான திரு மௌரியா அவர்களும் மற்றும் திரு தங்கவேலு அவர்களும் தலைமை தாங்கினர். மாநில இளைஞரணி செயலாளரான

மேலும் படிக்க »

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை எதிர்கட்சிகள் ஏன் புறக்கணித்திருக்கக்கூடாது – திரு கமல்ஹாசன், ம.நீ.ம தலைவர்

ஜூன் ௦9, 2௦23 இம்மாதம் (ஜூன் ௦2) இந்தியா டுடே நடத்திய சௌத் கான்க்ளேவ் 2௦23 கருத்தரங்கம் பல அரசியல் தலிவர்கள் மற்றும் பல துறை வல்லுனர்கள் பங்கேற்ற சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளாராக பங்கு கொண்ட மக்கள் நீதி

மேலும் படிக்க »

நான் பிரச்சாரப் படங்களுக்கு எதிரானவன் – மக்கள் நீதி மய்யம் தலைவர்

மே 27, 2௦23 உலக திரையுலக வரலாற்றில் இந்தியத் திரையுலகில் மிக முக்கியமான பங்களிப்பை தந்து பெரும் பங்காற்றி வருவது தமிழ்த் திரையுலகம் என அனைவரும் அறிந்ததே. இதில் குறிப்பிடத்தக்கது யாதெனில் நூற்றாண்டுகள் கண்ட தமிழ்த் திரையுலகில் சுமார் 6 வயது

மேலும் படிக்க »

பாராளுமன்றத் திறப்புவிழாவிற்கு வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர்

மே 27, 2௦23 புது தில்லியில் ஒருங்கிணைக்கப்பட்ட பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நாளை (28.05.2023) சனிக்கிழமை மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடக்கவிருக்கிறது. இதனிடையில் இவ்விழாவிற்கு மாண்புமிகு இந்திய குடியரசு தலைவர்

மேலும் படிக்க »

மல்யுத்த பெண் வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் – ம.நீ.ம வலியுறுத்தல்

புது தில்லி : மே ௦3, 2௦23 பேட்டி பச்சாவ் (பெண்களைப் காப்போம்) எனும் கோஷத்தை ஒவ்வொரு மேடையிலும் முழங்குகிறார் நமது இந்தியாவின் பிரதமர் மோடி. ஆனால் சொல் வேறு அவருடைய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான பிரிஜ் பூசன் சரண்சிங் இன்

மேலும் படிக்க »

மக்களின் நலனுக்காக என் சொந்தப் பணத்தில் போயிங் விமானத்தில் கூட வருவேன் – ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

ஏப்ரல் 20, 2023 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள். தேர்தல் பிரச்சாரம் செய்ய ஆகாய மார்க்கமாக ஹெலிகாப்டரில் பயணம் செய்து கோவை சென்றடைந்தார்.

மேலும் படிக்க »

வரையறை மீறும் ஆளுநர் – கண்டித்து தீர்மானம் இயற்றிய தமிழக சட்டப் பேரவை

தமிழ்நாடு : ஏப்ரல் 11, 2023 தமிழ்நாட்டின் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தமது பொறுப்பை உணராமல் பல மசோதாக்களை உடனடியாக ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது மரபிற்கு முரணானது. ஒரு கட்சியின் அங்கத்தினர் போல் சொந்த விருப்புடன் செயல்படுவது அரசியல் சாசன விதிகளுக்கு

மேலும் படிக்க »

இறையாண்மைக்கு எதிரான ஆளுநர் தமிழகத்திற்கு அவசியமில்லை – மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

சென்னை : ஏப்ரல் ௦9, 2௦23 மாநில அரசின் இறையாண்மைக்கு எதிராகப் பேசி அறைகூவல் விடுக்கும் ஆளுநர்.ஆர்.என்.ரவி அவர்கள் பதவியில் நீடிக்கக் கூடாது ! – மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் திரு மௌரியா அவர்கள் அறிக்கை ! ஒருங்கிணைந்த மாநிலங்கள்

மேலும் படிக்க »

துப்பாக்கிச்சூடு கொல்லப்பட்ட உயிர்கள் பொம்மைகளா ? ஆளுநரை கண்டிக்கும் மக்கள் நீதி மய்யம்

சென்னை : ஏப்ரல் 08, 2023 பல ஆண்டுகளாக பெரும் எதிர்ப்புகளுடன் இயங்கி வந்த தூத்துக்குடியில் அமைந்துள்ள வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளாலும் காற்று மாசு, நீர்நிலைகள் ரசாயன கலப்பின் காரணமாக பொதுமக்களுக்கு பல உடல் உபாதைகள், குறைபாடுகள் மற்றும் கேன்சர்

மேலும் படிக்க »

நியாயத்தின் பக்கம் நான் துணை நிற்பேன் : திரு ராகுல்காந்திக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்

சென்னை : மார்ச் 23, 2௦23 ஆளும் பாரதிய ஜனதா அரசு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு பாராளுமன்ற உறுப்பினருமான திரு ராகுல்காந்தி அவர்களின் மீது பிரதமர் பெயரை அவமதித்ததாக கூறி வழக்கு பதியப்பட்டு, அவசர அவசரமாக இரண்டு வருட

மேலும் படிக்க »

எரியுது வயிறு : போகுது உயிரு – எரிவாயு விலை உயர்வு, ஆன்லைன் ரம்மி தடை செய்க : மக்கள் நீதி மய்யம் கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை : மார்ச் 22, 2௦23 சில மாநில தேர்தல்கள் நடைபெறவிருந்ததை காரணமாக வைத்து சுமார் 1௦௦ நாட்களுக்கு மேலாக சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படாமல் இருந்தது. கடந்த ஜனவரி 2௦23 பிறகு திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று

மேலும் படிக்க »

எது முக்கியம் : மதவாதமா ? தேச நலனா ?

ஈரோடு : பிப்ரவரி 18, 2023 மதச்சார்பற்ற சக்திகளை ஒன்றிணைத்து தேச நலன் காக்க ஈரோட்டில் நம்மவர்.. ErodeEastByPoll #ErodeByElection #ErodeEastByPolls #Erode #ஈரோடுகிழக்கில்நம்மவர்

மேலும் படிக்க »