மய்யத்தின் பாஜக எதிர்ப்பு

மக்கள் நீதி மய்யம் கட்சியை பாஜகவின் B-Team என்று தொடர்ச்சியாக திமுக குற்றம் சாட்டுகிறது. மக்கள் நீதி மய்யமம் தலைவர் கமல் ஹாசன் அவர்களும் பாஜக ஆட்சியின் செயல்பாடுகளையும் பாஜகவின் மற்றும் RSS சித்தாந்தத்தையும் எதிர்த்து பல முறை குரல் கொடுத்ததுண்டு. அதன் தொகுப்பு இங்கு உங்கள் பார்வைக்கு. 

  • பேரறிஞரின் காட்டிய பாதையில் செல்வோம்-மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

    பிப்ரவரி 03, 2025

    திராவிட கழகத்தில் தந்தை பெரியாரின் சீடராக தமது அரசியல் வாழ்க்கையை துவங்கியவர் தனது அரசியல் ஆசானின் மீது சிறிது முரண் ஏற்படவே தன்னுடன் இயங்கிவந்த தோழர்களுடன் இணைந்து திராவிட முன்னேற்ற கழகத்தினை 1949 இல் துவக்கினார். அடுத்தடுத்த ஆண்டுகளில் மக்களிடையே இயைந்து பல போராட்டங்களை முன்னெடுத்து தலைமை தாங்கி செய்து வந்த அரசியல் 1967 இல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தியது. அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தின் கடைசி முதல்வரானார். பின்னர் தமிழ்நாடு என பெயர்மாற்றம் செய்து அரசாணையில் இடம்பெறச் செய்து தமிழ்நாட்டின் முதல் முதல்வராக செயல்பட்டு இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக பேசச் செய்தார். கல்விக்கூடங்கள் இயங்கச் செய்தும், இந்தித் திணிப்பை எதிர்த்தும் போராட்டங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது. சிறந்த ஆங்கிலப் புலமையும் தமிழில் சிறந்த தேர்ச்சியும் கொண்டவர் எழுத்தாளராகவும் பரிமளித்தார். தனது சொல்வன்மையால் தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று ஆட்சியமைத்த போதிலும் மிகக் குறைந்த காலமே முதல்வராக பதவி வகித்துள்ளார். புற்றுநோயால் தாக்கப்பட்டு சிகிச்சைக்கு அயல்நாடு சென்றும் அங்கே சிகிச்சை பலனளிக்காமல் இயற்கை எய்தினார்.

    திராவிட நாடு என்று முழக்கமிட்ட இயக்கத்தின் தலைவராக இன்று வரை மக்களிடையே நினைவுகளுடன் திகழ்கிறார். அண்ணா அவர்களின் நினைவு நாளான இன்று அவரது புகழைப் போற்றும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் தமது ட்விட்டர் பக்கத்தில் நினைவஞ்சலி வெளியிட்டுள்ளார்.

    "எத்தனை இடையூறு வந்தாலும் பகுத்தறிவுப் பாதையே நம்மைச் சிறந்த இலக்குக்கு அழைத்துச் செல்லும் என்று பேசி, அதைக் கடைப்பிடித்தும் நமக்கெல்லாம் வழிகாட்டி, தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகவே மாறி நிலைத்திருக்கும் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இன்று. அவர் காட்டிய பாதையில் தொடர்ந்து வெற்றி நடை போடுவோம்." - திரு.கமல்ஹாசன், தலைவர் - மக்கள் நீதி மய்யம்

    https://twitter.com/ikamalhaasan/status/1886316937996542154

  • புறக்கணிப்பட்ட தமிழ்நாடு – ஒன்றிய பட்ஜெட் : மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

    பிப்ரவரி : 01, 2025

    இந்திய பாராளுமன்றத்தில் ஆளும் பாஜக அரசு சார்பாக இன்று 2025 இன் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    வழக்கம் போலவே இந்த வருடமும் தமிழகத்திற்கு சிறப்பு ஒதுக்கீடுகள் ஏதுமில்லை. நடப்பு ஆண்டில் பீகார் மாநிலத்தில் சட்டமன்ற பேரவைத் தேர்தல் நடைபெறவிருப்பதால் பல சலுகைகள் அளிக்கும்படி நிதி ஒதுக்கீடுகள் இருப்பதாக பல கட்சித் தலைவர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

    மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் ஒன்றிய அரசின் கடந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையை NDA அரசின் அறிக்கை தான் ஆனால் நாம் எதிர்பார்த்தது போல் இந்தியாவின் நிதிநிலை அறிக்கை அல்ல என்ற இடித்துரைத்தல் இந்தியா முழுதும் பரபரப்பாக பேசப்பட்டது.

    அதே போல் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையும் வழக்கம்போல் எந்த எதிர்பார்ப்பையும் நிறைவேற்றவில்லை என்று தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் திரு.கமல்ஹாசன் அவர்கள்.

    "It's disappointing that the Union Government has once again ignored Tamil Nadu's critical development needs. States that perform well economically deserve consistent support in the Union Budget, not just pre-election rewards. Fortunately, Tamil Nadu's turn will come in 2026? Lip service to India's farmers continues, with no legal guarantee for MSP. Our farmers, the backbone of the nation, deserve more than empty promises. However, I appreciate the progressive income tax reforms that empower taxpayers, the true drivers of our economy. Makkal Needhi Maiam will continue to champion any policy that bolsters development through domestic demand and empowers the Indian common man." - Dr. Kamal Haasan, President - Makkal Needhi Maiam

    https://twitter.com/ikamalhaasan/status/1885679461410226566

    "Once again Tamil Nadu has been ignored" Kamal Haasan slams the Union budget while appreciating the tax reforms. - Makkal Needhi Maiam

    https://twitter.com/maiamofficial/status/1885695540731822313

    #KamalHaasan #MakkalNeedhiMaiam #Budget2025

பாபா சாஹேப் மாண்பை சீர்குலைக்க ஒப்புக் கொள்ள முடியாது – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

டிசம்பர் 19, 2024 ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட திட்டத்திற்கான அரசியல் சாசனத்தில் 129 ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் ஒன்றிய அரசின் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று மதியத்திற்கு மேல் தாக்கல் செய்தார். அதன்

மேலும் படிக்க »

மதவாதம் விலகிட ; ஜனநாயகம் வென்றிட கோவையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பரப்புரை – நேரலை

கோவை : ஏப்ரல் 16, 2024 (Updated 17.04.2024) மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு தற்போது கோவை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார். அதன் நேரலை ஒளிபரப்பின் லிங்க் வெளியிட்டுள்ளது மக்கள் நீதி மய்யம்

மேலும் படிக்க »

நாட்டின் நலம் காக்க நம்மவர் வருகிறார் : கோவையில் மக்கள் நீதி மய்யம் தலைவர்

கோவை : ஏப்ரல் 14, 2024 (Updated Arpil 15, 2024) இன்னும் சில நாட்களில் நடக்கவிருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

மேலும் படிக்க »

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கானப் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் : தலைவர் திரு.கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது

சென்னை – மார்ச் 24, 2024 வருகின்ற ஏப்ரல் மாதம் தேதியன்று நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் இன்று (24.03.2024) சென்னை தி.நகரில் உள்ள தனியார் அரங்கில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் துணைத்தலைவர்கள்,

மேலும் படிக்க »

குற்றம் கடிதலுக்கு இதுவல்ல நேரம் – பாசிசம் அகற்றுவதே இப்போதைய தேவை – மய்யத் தலைவர் கமல்ஹாசன்

சென்னை : மார்ச் 22, 2024 நேர்மை ஒன்றையே முக்கிய குறிக்கோளாக தனித்தன்மையுடன் துவங்கிய கட்சி மக்கள் நீதி மய்யம், இதற்கு முன்னர் நீங்கள் குறைகூறிய கட்சியுடனே கூட்டணி அமைத்து விட்டீர்களே என குற்றம் சுமத்தும் அந்த நபர்களுக்கு நான் சொல்லிக்

மேலும் படிக்க »

தமிழக பெண்களை தரம்தாழ்த்தி விமர்சிக்கும் பாஜக பெண் அமைச்சர்களுக்கு கண்டனம் – மக்கள் நீதி மய்யம் தலைவர்

சென்னை : மார்ச் 20, 2024 ஆளும் ஒன்றிய அரசைச் சேர்ந்த பெண் அமைச்சர்கள் இருவர் நிர்மலா சீதாராமன் மற்றும் திரைப்பட நடிகை குஷ்பு ஆகிய இருவரும், நமது தமிழக பெண்களை கேவலமான தொனியில் அதாவது கடந்த ஆண்டில் தாக்கிய மிக்ஜாம்

மேலும் படிக்க »

நம்மவரை சந்தித்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்ட குழுவினர்

சென்னை : மார்ச் : 15, 2024 தூத்துக்குடி செம்பு உருக்காலையான ஸ்டெர்லைட் மூடப்பட்டதை மீண்டும் திறக்க வேதாந்த நிறுவனம் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்றதையடுத்து அப்பகுதி மக்கள் அனைவரும் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு மீண்டும் திறக்கக்கூடாது என போராட்டம் செய்தனர்

மேலும் படிக்க »

தேர்தலுக்காக இறையாண்மையைச் சிதைக்கும் மத்திய அரசு ! – மக்கள் நீதி மய்யம் தலைவர் சாடல்

சென்னை : மார்ச் – 12, 2024 குடியுரிமைச் சட்டம் திருத்தும் செய்த மசோதாவை இன்று அமல்படுத்தியுள்ளது குறித்து தனது கடும் கண்டனத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் நீண்ட அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளார். “தேர்தலுக்காக பொதுமக்களைப் பிளவுபடுத்தி

மேலும் படிக்க »

Electoral Bonds தடை-வரலாற்றுத் தீர்ப்பை வரவேற்கிறேன் : ம.நீ.ம தலைவர் திரு.கமல்ஹாசன்

பிப்ரவரி 15, 2024 தேசிய மற்றும் மாநில கட்சிகள் பலவும் கட்சி வளர்ச்சிக்கென நன்கொடைகள் பெற்றுக்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. பெரும் நிறுவனங்கள் இங்குள்ள கட்சிகளுக்கு அவ்வப்போது நிதிகளை தருவதும் குறிப்பாக தேர்தல்கள் நடைபெறும்போது நிறுவனத்தின் சார்பாக நன்கொடைகள் வழங்குவார்கள். அப்படி

மேலும் படிக்க »

தேசிய தொழில்நுட்ப கழக பணி நியமனம்-மத்திய அரசின் இந்தி திணிப்பு : ம.நீ.ம கண்டனம்

ஆகஸ்ட் : 26, 2௦23 மத்திய அரசின் இந்தித் திணிப்பிற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்! தேசிய தொழில்நுட்ப கழக பணி நியமன அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல். துணைத் தலைவர் திரு. தங்கவேலு அவர்கள் அறிக்கை. தேசிய தொழில்நுட்பக் கழகக்

மேலும் படிக்க »

மணிப்பூரும் இந்தியாவின் ஓர் மாநிலமே ; புறக்கணிப்பது ஏன் மய்யத்தலைவர் கேள்வியும் கண்டன ஆர்ப்பாட்டமும்

ஆகஸ்ட் 08, 2023 இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 3 மாதங்களாக இரு சமூகத்தினரிடையே நடந்த மோதல் குறித்து பல கட்டுரைகளில் தொடர்ச்சியாக எழுதி இருந்தோம். நாடெங்கிலும் இது குறித்து கவலையடைந்துள்ளனர். மதவாதத்தின் மொத்த உருவமாக ஆளும் கட்சி உருவெடுத்து நிற்கிறதோ

மேலும் படிக்க »

மணிப்பூர் கலவரம் : பொறுப்பற்ற மத்திய அரசைக் கண்டித்து மய்யம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

சென்னை : ஆகஸ்ட் 03, 2023 பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலமான மணிப்பூரில் இரு சாராருக்கும் ஏற்பட்ட மோதல் 80 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது இதனை கொஞ்சமும் சட்டை செய்யாமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வரும் ஆளும் மத்திய

மேலும் படிக்க »

இந்தியாவின் தலைமகன் பிரதமர் அவர்கள் மணிப்பூர் செல்லத் தயங்குவதேன் ? மக்கள் நீதி மய்யம் கேள்வி

சென்னை : ஆகஸ்ட் ௦1, 2௦23 இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக அங்கே வாழும் இரண்டு சமூகத்தினரிடையே எழுந்த மோதலால் பெரும் கலவரங்களுக்கு இரையாகிப் போனது. கடந்த மே மாதத்தில் ஓர் நாள் சிறுபான்மை

மேலும் படிக்க »

புறக்கணிக்கப்பட்ட மணிப்பூர், மறுக்கப்பட்ட மனிதநேயம்!

ஜூலை 25, 2௦23 பற்றி எரியுது மணிப்பூர். இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இரண்டு சமூகத்தினரிடையே தொடங்கிய மோதல் சுமார் எழுபது நாட்களைக் கடந்தும் தொடர்கிறது. ஏன் என அம்மாநிலத்தில் ஆளும் பாஜக தலைமையிலான அரசை நோக்கி எந்தக்

மேலும் படிக்க »

என்னாயிற்று தேர்தல் வாக்குறுதிகள் : கேட்டது கோவை தெற்கு மக்கள் நீதி மய்யம்

கோவை – ஜூலை 17, 2023 கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பிஜேபி யை சேர்ந்த திருமதி வானதி ஸ்ரீநிவாசன் தொகுதியில் எந்த திட்டங்களையும் சரிவர நிறைவேற்றித் தரவில்லை என பொதுமக்களிடமிருந்து எழுந்த ஆதங்கம் குறித்து அறிந்த மக்கள் நீதி

மேலும் படிக்க »

கோவை தெற்கு MLA வானதி ஸ்ரீநிவாசன் : செயல்படாத சட்டமன்ற உறுப்பினர் – மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

கோவை : ஜூலை 13, 2௦23 கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பாக, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி.வானதி சீனிவாசன் அவர்கள் 2021 தேர்தலில், தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து, வருகின்ற 16ம் தேதி

மேலும் படிக்க »

நாமக்கல் ராசிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டம்

ராசிபுரம் : ஜூன் 20, 2023 நாமக்கல் நிழக்கு மாவட்டம் ராசிபுரத்தில் மக்கள் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுக்கூட்டம் சிறப்பாக நடத்தப்பட்டது. துனைத்தலைவர்களான திரு மௌரியா அவர்களும் மற்றும் திரு தங்கவேலு அவர்களும் தலைமை தாங்கினர். மாநில இளைஞரணி செயலாளரான

மேலும் படிக்க »

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை எதிர்கட்சிகள் ஏன் புறக்கணித்திருக்கக்கூடாது – திரு கமல்ஹாசன், ம.நீ.ம தலைவர்

ஜூன் ௦9, 2௦23 இம்மாதம் (ஜூன் ௦2) இந்தியா டுடே நடத்திய சௌத் கான்க்ளேவ் 2௦23 கருத்தரங்கம் பல அரசியல் தலிவர்கள் மற்றும் பல துறை வல்லுனர்கள் பங்கேற்ற சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளாராக பங்கு கொண்ட மக்கள் நீதி

மேலும் படிக்க »

நான் பிரச்சாரப் படங்களுக்கு எதிரானவன் – மக்கள் நீதி மய்யம் தலைவர்

மே 27, 2௦23 உலக திரையுலக வரலாற்றில் இந்தியத் திரையுலகில் மிக முக்கியமான பங்களிப்பை தந்து பெரும் பங்காற்றி வருவது தமிழ்த் திரையுலகம் என அனைவரும் அறிந்ததே. இதில் குறிப்பிடத்தக்கது யாதெனில் நூற்றாண்டுகள் கண்ட தமிழ்த் திரையுலகில் சுமார் 6 வயது

மேலும் படிக்க »

பாராளுமன்றத் திறப்புவிழாவிற்கு வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர்

மே 27, 2௦23 புது தில்லியில் ஒருங்கிணைக்கப்பட்ட பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நாளை (28.05.2023) சனிக்கிழமை மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடக்கவிருக்கிறது. இதனிடையில் இவ்விழாவிற்கு மாண்புமிகு இந்திய குடியரசு தலைவர்

மேலும் படிக்க »

மல்யுத்த பெண் வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் – ம.நீ.ம வலியுறுத்தல்

புது தில்லி : மே ௦3, 2௦23 பேட்டி பச்சாவ் (பெண்களைப் காப்போம்) எனும் கோஷத்தை ஒவ்வொரு மேடையிலும் முழங்குகிறார் நமது இந்தியாவின் பிரதமர் மோடி. ஆனால் சொல் வேறு அவருடைய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான பிரிஜ் பூசன் சரண்சிங் இன்

மேலும் படிக்க »

மக்களின் நலனுக்காக என் சொந்தப் பணத்தில் போயிங் விமானத்தில் கூட வருவேன் – ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

ஏப்ரல் 20, 2023 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள். தேர்தல் பிரச்சாரம் செய்ய ஆகாய மார்க்கமாக ஹெலிகாப்டரில் பயணம் செய்து கோவை சென்றடைந்தார்.

மேலும் படிக்க »

வரையறை மீறும் ஆளுநர் – கண்டித்து தீர்மானம் இயற்றிய தமிழக சட்டப் பேரவை

தமிழ்நாடு : ஏப்ரல் 11, 2023 தமிழ்நாட்டின் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தமது பொறுப்பை உணராமல் பல மசோதாக்களை உடனடியாக ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது மரபிற்கு முரணானது. ஒரு கட்சியின் அங்கத்தினர் போல் சொந்த விருப்புடன் செயல்படுவது அரசியல் சாசன விதிகளுக்கு

மேலும் படிக்க »

இறையாண்மைக்கு எதிரான ஆளுநர் தமிழகத்திற்கு அவசியமில்லை – மக்கள் நீதி மய்யம் கோரிக்கை

சென்னை : ஏப்ரல் ௦9, 2௦23 மாநில அரசின் இறையாண்மைக்கு எதிராகப் பேசி அறைகூவல் விடுக்கும் ஆளுநர்.ஆர்.என்.ரவி அவர்கள் பதவியில் நீடிக்கக் கூடாது ! – மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் திரு மௌரியா அவர்கள் அறிக்கை ! ஒருங்கிணைந்த மாநிலங்கள்

மேலும் படிக்க »

துப்பாக்கிச்சூடு கொல்லப்பட்ட உயிர்கள் பொம்மைகளா ? ஆளுநரை கண்டிக்கும் மக்கள் நீதி மய்யம்

சென்னை : ஏப்ரல் 08, 2023 பல ஆண்டுகளாக பெரும் எதிர்ப்புகளுடன் இயங்கி வந்த தூத்துக்குடியில் அமைந்துள்ள வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளாலும் காற்று மாசு, நீர்நிலைகள் ரசாயன கலப்பின் காரணமாக பொதுமக்களுக்கு பல உடல் உபாதைகள், குறைபாடுகள் மற்றும் கேன்சர்

மேலும் படிக்க »