சென்னை : மார்ச் 23, 2௦23

ஆளும் பாரதிய ஜனதா அரசு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு பாராளுமன்ற உறுப்பினருமான திரு ராகுல்காந்தி அவர்களின் மீது பிரதமர் பெயரை அவமதித்ததாக கூறி வழக்கு பதியப்பட்டு, அவசர அவசரமாக இரண்டு வருட சிறைதண்டனை வழங்கி இருக்கிறது. நீங்கள் நினைத்துக் கொள்ளலாம் எதனால் இந்த நடவடிக்கை என்று உண்மையில் அவர் பேசியது 2௦19 ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலத்தில் கூட்டம் நடைபெற்றது அப்போது பேசியதில் இருந்து அவர் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது இன்னும் கண்டிக்கத்தக்கது. இதன் தொடர்பாக தனது கண்டனங்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் சட்டரீதியாக எந்த நேரத்திலும் உங்களுடன் துணை நிற்பேன் என திரு ராகுல்காந்தி அவர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

Rahulji, I stand by you during these times! You have seen more testing times and unfair moments. Our Judicial system is robust enough to correct aberrations in dispensation of Justice. We are sure, you will get your justice on your appeal of the Surat Court’s decision! Satyameva Jayate!!Dr. Kamalhaasan, President, Makkal Needhi Maiam