மே 28, 2025
கடந்த 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் எனும் நடுவுநிலைமை கொள்கை கொண்ட அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்ட மய்யம் எட்டாவது ஆண்டில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. பாராளுமன்றம் , சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் பங்கேற்ற நிலையில் 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் நூலிழையில் தலைவர் நம்மவரின் வெற்றியை சூழ்ச்சியாக பறித்துக் கொண்டது பிரதான தேசிய கட்சி.

பின்னர் கடந்த 2024 ஆண்டில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணியில் இணைந்தார் நம்மவர் அவர்கள். கூட்டணியில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு பக்கபலமாக பிரச்சாரத்தில் பங்கேற்று வலம் வந்தார். அதனின்பொருட்டு வரவிருக்கும் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட களமிறங்குகிறார் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள்.

அதனையொட்டி நமது மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் கடந்த ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போடப்பட்ட உடன்படிக்கையின்படி மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மக்கள் நீதி மய்யம் ஒதுக்கப்படும் என்பதை உறுதி செய்தல் மற்றும் போட்டியிடும் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களை ஆதரித்து வெற்றி பெறச் செய்யுமாறு திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளை ஆதரிக்கும்படி கேட்டுக் கொள்வதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
28-05-2025 அன்று நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
தீர்மானம் 1: 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2025-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில், வருகிற ஜூன் 19-ஆம் தேதி நடைபெற இருக்கும் 6 தமிழக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளராக, தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு ஏகமனதாக முடிவு செய்து அறிவிக்கிறது.
தீர்மானம் 2: மாநிலங்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரான திரு. கமல் ஹாசன் அவர்களுக்குத் தங்களது மேலான ஆதரவை நல்கும்படி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு கேட்டுக்கொள்கிறது. – மக்கள் நீதி மய்யம்

நன்றி : மக்கள் நீதி மய்யம்