செப்டெம்பர் : 05, 2024

இந்திய சுதந்திரத்திற்காக ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய தலைவர்களில் மிக முக்கியமானவர் கப்பலோட்டிய தமிழர் என அழைக்கப்பட்ட தூத்துக்குடி திரு. வ.உ. சிதம்பரம் அவர்கள். அன்னாரின் பிறந்தநாளான இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் சிதம்பரம் பெருமகனாரின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார்.

“தமிழில் பேச்சாற்றல், ஆங்கிலத்தில் பெரும்புலமை, சட்டம் உரைக்கும் கல்வி, தொழிற்சங்கப் போர்ஞானம் எனப் பல்வேறு திறன்கள் கொண்டவர் தலைவர் வ.உ.சி.

தன் அத்தனை ஆளுமையையும் சுதந்திரப்போராட்டத்திற்கு அர்ப்பணித்தவர். ‘இடர்ப்படினும் சுதந்திரம் பெறாது ஒடுங்கேன்’ என்று சூளுரைத்து, சமூகத்துக்காகவே வாழ்ந்து காட்டிய அப்பெருமகனாரின் பிறந்த நாளில் அன்னாரை வணங்கி வாழ்த்துகிறேன்.” – திரு.கமல்ஹாசன் – தலைவர், மக்கள் நீதி மய்யம்

நன்றி : மக்கள் நீதி மய்யம், சமூக வலைத்தளம்