மே 27, 2025
மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வழிகாட்டுதலில் தலைமையில் ஆதிதிராவிடர் அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் தலைமை அலுவலகத்தில் துணைத்தலைவர் திரு.தங்கவேலு அவர்கள் முன்னிலையில் ஆதி திராவிடர் நல அணியின் மாநில செயலாளர் திரு.சிட்கோ சிவா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் திரு.அருணாச்சலம் அவர்கள் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்வில் மண்டல, மாவட்ட நிர்வாகிகளை நியமனம் செய்வது உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட்டது.




மக்கள் நீதி மய்யம் ஆதிதிராவிடர் நல அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதல்படி, துணைத் தலைவர் திரு.தங்கவேலு அவர்கள் முன்னிலையில், ஆதிதிராவிட நல அணி மாநிலச் செயலாளர் திரு.சிட்கோ சிவா அவர்கள் தலைமையில், நிர்வாகிகள் திரு.ரூபலிங்கம் மற்றும் திரு.அய்யப்பன் ஆகியோரின் ஏற்பாட்டில் ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
கட்சியின் பொதுச் செயலாளர் திரு.அருணாச்சலம் அவர்கள் கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் இக்கூட்டத்தில் ஆதிதிராவிட நல அணியை வலுப்படுத்தவது, அணியின் புதிய மண்டல, மாவட்ட நிர்வாகிகளை நியமினம் செய்வது உள்ளிட்டவை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
இதில் மாணவர் அணி மாநில செயலாளர் திரு.ராகேஷ் ராஜசேகரன், மாவட்ட செயலாளர்கள், மாநகரச் செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் மற்றும் ஆதிதிராவிடர் நல அணி நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். – மக்கள் நீதி மய்யம்
நன்றி : மக்கள் நீதி மய்யம்