மே 29, 2025
பொருளாதாரம் நலிந்து போன குடும்பத்தில் பிறந்த எந்த ஒரு பிள்ளைக்கும் கல்வி கிடைக்காது போகக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பவர்கள் நம்மவர் மற்றும் அவர்தம் பின்தொடரும் அன்பர்கள். சமீபத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஷோபனா எனும் மாணவி மாநிலத்தில் முதலாவதாக தேர்வு பெற்றார்.

தமது அலுவலகத்திற்கு ஷோபனா அவர்களை வரவழைத்து உரையாடி கல்லூரியில் பயில தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக வாக்களித்துள்ளார் நம்மவர் தலைவர் அவர்கள். அதன்படி தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதல்படி மாணவர் வேத நாராயணன் கல்லூரிப் படிப்பை தொடர்வதற்குண்டான பண உதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்வு பொதுச்செயலாளர் திரு.அருணாச்சலம் அவர்களும் சென்னை மண்டல செயலாளர் திரு.மயில்வாகனன் அவர்களும் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வின் போது இளைஞரணி மாநில செயலாளர் திரு.ராகேஷ் ராஜசேகரன் அவர்களும் உடனிருந்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்கீழ், கட்சியின் பொதுச் செயலாளர் திரு.அருணாச்சலம் மற்றும் சென்னை மண்டலச் செயலாளர் திரு.மயில்வாகனன் ஆகியோரின் தலைமையில், மாணவர் வேத நாராயணனின் கல்லூரி மேற்படிப்பைத் தொடர உதவும் வகையில் பண உதவி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில், மாணவர் அணி மாநிலச் செயலாளர் திரு.ராகேஷ் ராஜசேகரன், சைதாப்பேட்டை மநீம மாவட்டச் செயலாளர் திரு.சைதை ஜே. கதிர், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் திருமதி.சுபாஷினி, மாநகரச் செயலாளர் திரு.MPM வெற்றிச்செல்வன், வட்டச் செயலாளர் திரு.முத்துக்குமரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். – மக்கள் நீதி மய்யம்
நன்றி : மக்கள் நீதி மய்யம்