மக்கள் நீதி மய்யம் கட்சியை பாஜகவின் B-Team என்று தொடர்ச்சியாக திமுக குற்றம் சாட்டுகிறது. மக்கள் நீதி மய்யமம் தலைவர் கமல் ஹாசன் அவர்களும் பாஜக ஆட்சியின் செயல்பாடுகளையும் பாஜகவின் மற்றும் RSS சித்தாந்தத்தையும் எதிர்த்து பல முறை குரல் கொடுத்ததுண்டு. அதன் தொகுப்பு இங்கு உங்கள் பார்வைக்கு.
இண்டியா கூட்டணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான திரு.ராகுல்காந்தி அவர்கள் நம்பிக்கை தரும் தேசிய தலைவர்களில் மிக முக்கியமானவர்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்களின் மனதிற்கினிய உற்ற நண்பரும் கூட. சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் எழுச்சி பாரத் ஜோடோ நடை பயணத்தின்போது நம்மவர் அவர்கள் புதுதில்லியில் திரு.ராகுல்காந்தி அவர்களுடன் இணைந்து நடை பயணம் மேற்கொண்டார். பயணத்தின் இறுதிக் கட்டத்தின் போது நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் சிறப்பாக உரையாற்றினார்.
அப்போது நம்மவர் அவர்கள் பேசுவதை உன்னிப்பாக கவனித்த திரு.ராகுல்காந்தி அவர்கள் அடுத்த நாளில் நம்மவரை தனது இல்லத்திற்கு அழைத்து உபசரித்து நாட்டின் அரசியல், பொருளாதாரம், மக்கள் நலன், தொழில் வளர்ச்சி, எளிய மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் முன்னேற்றம், கல்வி வளர்ச்சி குறித்தும் நீண்ட நேரம் உரையாடினர். மிகுந்த நட்பு பாராட்டும் திரு.ராகுல்காந்தி அவர்களுக்கு இன்றைக்கு பிறந்தநாள்.
நம்மவர் அவர்கள் தமது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து டுவீட் செய்துள்ளது கவனிக்கத்தக்கது.
Wishing my friend Mr.Rahul Gandhi a very happy birthday. May you continue on the path of unity, compassion, and courage - with the same quiet resolve and steel that have defined you. - Kamal Haasan, President - Makkal Needhi Maiam
தலைவர் வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி தெரிவித்துள்ளார் திரு.ராகுல்காந்தி அவர்கள். அதில், விரைவில் பாராளுமன்றத்தில் உறுதியாக ஒலிக்கவிருக்கும் உங்களின் குரலுக்காக காத்திருக்கிறேன் என்கிற தொனியில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வழிகாட்டுதல்படி மக்களுக்கான நற்பணிகள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகிறது. நெல்லை மண்டலம், ஆலங்குளம் ம.நீ.ம மாவட்டம் கீழப்பாவூரில் மக்கள் நீதி மய்யம் முன்னெடுப்பில் பொதுமக்கள் பயனுறும் வகையில் மாபெரும் மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது. நெல்லை மண்டல செயலாளர் டாக்டர் திரு.பிரேம்நாத் அவர்களின் தலைமையில் பொருநை மருத்துவக் குழுவினரின் உதவியுடன் இந்த முகாமில் எலும்பு சம்பந்தப்பட்ட மருத்துவம், நுரையீரல் மருத்துவம். மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலம், பொது மருத்துவம் உள்ளிட்ட அனைத்து மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
மக்கள் நீதி மய்யம் கட்சி மற்றும் கமல் ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில், மாபெரும் மருத்துவ முகாம்.
மக்கள் நீதி மய்யம் கட்சி மற்றும் ஆலங்குளம் & கீழப்பாவூர் தலைமை கமல் ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம், ஆலங்குளம் மநீம மாவட்டம் கீழப்பாவூரில் அமைந்துள்ள குருசுவாமி கோவில் திருமண மஹாலில் வைத்து சிறப்பாக நடைபெற்றது.
நெல்லை மண்டல செயலாளர் டாக்டர் திரு. பிரேம்நாத் அவர்கள் தலைமையில், பொருநை மருத்துவக் குழுவினரின் ஒத்துழைப்பில் நடைபெற்ற இந்த முகாமில், எலும்பு சம்பந்தமான மருத்துவம், நுரையீரல் மருத்துவம், மகப்பேறு & பெண்கள் நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், புற்றுநோய் மருத்துவம், இருதயநோய் மருத்துவம், பொது மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, மருந்துகள் வழங்கப்பட்டதுடன், உரிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. பிரபாகரன், ஆலங்குளம் தொழிலதிபர் திரு. கோல்டன் செல்வராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
மேலும் நிகழ்வில் ஆலங்குளம் மாவட்ட செயலாளர் திரு வே.ஶ்ரீகருணாகர ராஜா,தென்காசி மாவட்ட செயலாளர் திரு. இல. செல்லப்பா, நற்பணி இயக்க செயலாளர் திரு. D. முருகேசன், இணை செயலாளர் திரு. பரமசிவம், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளான திரு. கிருஷ்ணன், தங்கம், S. முருகன், நிர்வாகிகள் திரு. வே. சந்தனகுமார், திருவேங்கடம் திரு. கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மருத்துவக் குழுவில் திரு. S. மாரியப்பன், திரு. R. பரமசிவன், திரு. M. சிவகுமார், திரு. P. ஆவுடையப்பன், திரு. V. கமல் இசக்கி ஆகியோர் பங்கேற்று உரிய சிகிச்சைகளை வழங்கினர்.
சென்னை : மார்ச் 05, 2025 பதிவு புதுப்பிக்கப்பட்டது மார்ச் 07, 2025 ஆளும் ஒன்றிய அரசின் அமைச்சரவையில் வருகின்ற 2026 ஆண்டில் பாராளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு பணிகள் இயற்ற பணிகள் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது. அவசியமற்ற மறுசீரமைப்பு தெற்கில்
டிசம்பர் 19, 2024 ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட திட்டத்திற்கான அரசியல் சாசனத்தில் 129 ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் ஒன்றிய அரசின் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று மதியத்திற்கு மேல் தாக்கல் செய்தார். அதன்
கோவை : ஏப்ரல் 16, 2024 (Updated 17.04.2024) மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு தற்போது கோவை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார். அதன் நேரலை ஒளிபரப்பின் லிங்க் வெளியிட்டுள்ளது மக்கள் நீதி மய்யம்
கோவை : ஏப்ரல் 14, 2024 (Updated Arpil 15, 2024) இன்னும் சில நாட்களில் நடக்கவிருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்
சென்னை – மார்ச் 24, 2024 வருகின்ற ஏப்ரல் மாதம் தேதியன்று நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் இன்று (24.03.2024) சென்னை தி.நகரில் உள்ள தனியார் அரங்கில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் துணைத்தலைவர்கள்,
சென்னை : மார்ச் 22, 2024 நேர்மை ஒன்றையே முக்கிய குறிக்கோளாக தனித்தன்மையுடன் துவங்கிய கட்சி மக்கள் நீதி மய்யம், இதற்கு முன்னர் நீங்கள் குறைகூறிய கட்சியுடனே கூட்டணி அமைத்து விட்டீர்களே என குற்றம் சுமத்தும் அந்த நபர்களுக்கு நான் சொல்லிக்
சென்னை : மார்ச் 20, 2024 ஆளும் ஒன்றிய அரசைச் சேர்ந்த பெண் அமைச்சர்கள் இருவர் நிர்மலா சீதாராமன் மற்றும் திரைப்பட நடிகை குஷ்பு ஆகிய இருவரும், நமது தமிழக பெண்களை கேவலமான தொனியில் அதாவது கடந்த ஆண்டில் தாக்கிய மிக்ஜாம்
சென்னை : மார்ச் : 15, 2024 தூத்துக்குடி செம்பு உருக்காலையான ஸ்டெர்லைட் மூடப்பட்டதை மீண்டும் திறக்க வேதாந்த நிறுவனம் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்றதையடுத்து அப்பகுதி மக்கள் அனைவரும் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு மீண்டும் திறக்கக்கூடாது என போராட்டம் செய்தனர்
சென்னை : மார்ச் – 12, 2024 குடியுரிமைச் சட்டம் திருத்தும் செய்த மசோதாவை இன்று அமல்படுத்தியுள்ளது குறித்து தனது கடும் கண்டனத்தை மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் நீண்ட அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளார். “தேர்தலுக்காக பொதுமக்களைப் பிளவுபடுத்தி
பிப்ரவரி 15, 2024 தேசிய மற்றும் மாநில கட்சிகள் பலவும் கட்சி வளர்ச்சிக்கென நன்கொடைகள் பெற்றுக்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. பெரும் நிறுவனங்கள் இங்குள்ள கட்சிகளுக்கு அவ்வப்போது நிதிகளை தருவதும் குறிப்பாக தேர்தல்கள் நடைபெறும்போது நிறுவனத்தின் சார்பாக நன்கொடைகள் வழங்குவார்கள். அப்படி
ஆகஸ்ட் : 26, 2௦23 மத்திய அரசின் இந்தித் திணிப்பிற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்! தேசிய தொழில்நுட்ப கழக பணி நியமன அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல். துணைத் தலைவர் திரு. தங்கவேலு அவர்கள் அறிக்கை. தேசிய தொழில்நுட்பக் கழகக்
ஆகஸ்ட் 08, 2023 இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 3 மாதங்களாக இரு சமூகத்தினரிடையே நடந்த மோதல் குறித்து பல கட்டுரைகளில் தொடர்ச்சியாக எழுதி இருந்தோம். நாடெங்கிலும் இது குறித்து கவலையடைந்துள்ளனர். மதவாதத்தின் மொத்த உருவமாக ஆளும் கட்சி உருவெடுத்து நிற்கிறதோ
சென்னை : ஆகஸ்ட் 03, 2023 பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலமான மணிப்பூரில் இரு சாராருக்கும் ஏற்பட்ட மோதல் 80 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது இதனை கொஞ்சமும் சட்டை செய்யாமல் மெத்தனப் போக்கை கடைபிடித்து வரும் ஆளும் மத்திய
சென்னை : ஆகஸ்ட் ௦1, 2௦23 இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக அங்கே வாழும் இரண்டு சமூகத்தினரிடையே எழுந்த மோதலால் பெரும் கலவரங்களுக்கு இரையாகிப் போனது. கடந்த மே மாதத்தில் ஓர் நாள் சிறுபான்மை
ஜூலை 25, 2௦23 பற்றி எரியுது மணிப்பூர். இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இரண்டு சமூகத்தினரிடையே தொடங்கிய மோதல் சுமார் எழுபது நாட்களைக் கடந்தும் தொடர்கிறது. ஏன் என அம்மாநிலத்தில் ஆளும் பாஜக தலைமையிலான அரசை நோக்கி எந்தக்
கோவை – ஜூலை 17, 2023 கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான பிஜேபி யை சேர்ந்த திருமதி வானதி ஸ்ரீநிவாசன் தொகுதியில் எந்த திட்டங்களையும் சரிவர நிறைவேற்றித் தரவில்லை என பொதுமக்களிடமிருந்து எழுந்த ஆதங்கம் குறித்து அறிந்த மக்கள் நீதி
கோவை : ஜூலை 13, 2௦23 கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பாக, கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி.வானதி சீனிவாசன் அவர்கள் 2021 தேர்தலில், தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து, வருகின்ற 16ம் தேதி
ராசிபுரம் : ஜூன் 20, 2023 நாமக்கல் நிழக்கு மாவட்டம் ராசிபுரத்தில் மக்கள் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொதுக்கூட்டம் சிறப்பாக நடத்தப்பட்டது. துனைத்தலைவர்களான திரு மௌரியா அவர்களும் மற்றும் திரு தங்கவேலு அவர்களும் தலைமை தாங்கினர். மாநில இளைஞரணி செயலாளரான
ஜூன் ௦9, 2௦23 இம்மாதம் (ஜூன் ௦2) இந்தியா டுடே நடத்திய சௌத் கான்க்ளேவ் 2௦23 கருத்தரங்கம் பல அரசியல் தலிவர்கள் மற்றும் பல துறை வல்லுனர்கள் பங்கேற்ற சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளாராக பங்கு கொண்ட மக்கள் நீதி
மே 27, 2௦23 உலக திரையுலக வரலாற்றில் இந்தியத் திரையுலகில் மிக முக்கியமான பங்களிப்பை தந்து பெரும் பங்காற்றி வருவது தமிழ்த் திரையுலகம் என அனைவரும் அறிந்ததே. இதில் குறிப்பிடத்தக்கது யாதெனில் நூற்றாண்டுகள் கண்ட தமிழ்த் திரையுலகில் சுமார் 6 வயது
மே 27, 2௦23 புது தில்லியில் ஒருங்கிணைக்கப்பட்ட பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நாளை (28.05.2023) சனிக்கிழமை மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடக்கவிருக்கிறது. இதனிடையில் இவ்விழாவிற்கு மாண்புமிகு இந்திய குடியரசு தலைவர்
புது தில்லி : மே ௦3, 2௦23 பேட்டி பச்சாவ் (பெண்களைப் காப்போம்) எனும் கோஷத்தை ஒவ்வொரு மேடையிலும் முழங்குகிறார் நமது இந்தியாவின் பிரதமர் மோடி. ஆனால் சொல் வேறு அவருடைய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான பிரிஜ் பூசன் சரண்சிங் இன்
ஏப்ரல் 20, 2023 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள். தேர்தல் பிரச்சாரம் செய்ய ஆகாய மார்க்கமாக ஹெலிகாப்டரில் பயணம் செய்து கோவை சென்றடைந்தார்.
தமிழ்நாடு : ஏப்ரல் 11, 2023 தமிழ்நாட்டின் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தமது பொறுப்பை உணராமல் பல மசோதாக்களை உடனடியாக ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பது மரபிற்கு முரணானது. ஒரு கட்சியின் அங்கத்தினர் போல் சொந்த விருப்புடன் செயல்படுவது அரசியல் சாசன விதிகளுக்கு
சென்னை : ஏப்ரல் ௦9, 2௦23 மாநில அரசின் இறையாண்மைக்கு எதிராகப் பேசி அறைகூவல் விடுக்கும் ஆளுநர்.ஆர்.என்.ரவி அவர்கள் பதவியில் நீடிக்கக் கூடாது ! – மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் திரு மௌரியா அவர்கள் அறிக்கை ! ஒருங்கிணைந்த மாநிலங்கள்