சென்னை : ஆகஸ்ட் 24, 2024

தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு சிறப்பாக நடைபெற்றது. கட்சியில் புதிய உறுப்பினர்கள் நூறு பேர் தங்களை இணைத்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து சிலம்பம், கராத்தே உள்ளிட்ட வீர விளையாட்டுக்களில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்ற குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தார் தலைவர். செயற்குழு மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர் பங்குகொள்ள தலைவரின் தலைமையில் பல தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

“மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில், தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில், மாநில நிர்வாகக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. மேலும் நம் கட்சியின் உறுப்பினர்களாக 100 பேர் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து சிலம்பம், கராத்தே உள்ளிட்ட விளையாட்டுகளில் பரிசுகள் வென்ற குழந்தைகளை சந்தித்துப் பாராட்டிய தலைவர் நம்மவர், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே எழுச்சியுரையாற்றினார்.”மக்கள் நீதி மய்யம்