சென்னை : செப்டெம்பர் 07, 2024

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பிலும் நம்மவர் தொழிற்சங்க பேரவை சார்பிலும் நடைபெற்ற கட்சி சார்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பாக வெளியிட்டுள்ளது சமூக ஊடக அணி.

செய்திக்குறிப்பில் இடம்பெற்றுள்ள பணிகளின் பட்டியல் உங்களுக்காக :

01. தூத்துக்குடி நம்மவர் தொழிற்சங்க பேரவை சார்பில் மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய விழா சிறப்புற நடைபெற்றது.

02. பொதுச்சேவை செய்த நல்ல உள்ளங்களுக்கு நம்மவர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

03. நாமக்கல் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்த குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

04. சென்னை மதுரவாயல் தொகுதியில் நிலப்பிரச்சினை தொடர்பாக மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கள ஆய்வு செய்து மக்களை சந்தித்தனர்.

05. வால்பாறையில் மக்கள் நீதி மய்யம் கிளைச் செயலாளர்கள் நியமனத்திற்கான பணிகள் நடைபெற்றன.

06. பெரம்பூர் மற்றும் திருவிகநகர் தொகுதிகளில் வட்ட நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு கட்சியின் அடையாள அட்டை மாவட்டச் செயலாளர் அவர்களால் வழங்கப்பட்டது.

களத்தில் மய்யம் ! மேற்கண்ட நிகழ்வுகளை பொறுப்பேற்று நடத்திய அனைத்து நிர்வாகிகளுக்கு உளமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும் !

நன்றி : மக்கள் நீதி மய்யம்