கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை – திருக்குறள்

கல்வி பயிலும் மாணவர்கள் பலர் தமது குடும்ப சூழல் காரணமாக பள்ளிப்படிப்பு தொடர இயலாமல் தடை ஏற்படும். அப்படி ஓர் மாணவியின் கல்வி கற்றல் தடைபெறக் கூடாது என்று எண்ணிய மக்கள் நீதி மய்யம் மாவட்ட துணைச் செயலாளர் திரு முனியசாமி, நிர்வாகிகள் திரு.சொக்கர், திரு.சரவணன் மற்றும் உறுப்பினர்கள் பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் செவதறியாது நின்ற செல்வி யாமினி எனும் மாணவியின் கல்விக்கட்டணத்தை அளித்தார்கள்.