நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகை, நாகூர், திருமருகல், சிக்கல், தெத்தி ஆகிய பகுதிகளில் நீண்ட ஆண்டுகளாக குளங்களின் சுற்றுப்புறச் சுவர்கள் இடிந்து விழுந்து பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ளன. மழை மற்றும் பேரிடர் காலங்களில் குளங்களின் நீர்மட்டம் உயர்ந்து வீட்டுகளுக்குள் தண்ணீர் புகுந்து அப்பகுதி மக்கள் இன்னலில் வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் இவற்றை உடனடியாக சீர்செய்யவேண்டி மாவட்ட ஆட்சியரிடம் நாகை மத்திய மாவட்டச் செயலாளர் எம். செய்யது அனஸ் மனு அளித்தார்.