சென்னை, ஆகஸ்ட் 05, 2022

தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்த தமிழக கடலோரப் பாதுகாப்பு படையினர் 21 கொண்ட குழு ஒன்று சென்னை கடற்கரையில் துவங்கி ராமேஸ்வரம் வரை பாய்மரப் படகில் பயணித்து பின்னர் அங்கிருந்து மீண்டும் சென்னை வந்தடைந்தனர். இப்பெரும் செயலை செய்தமைக்கு உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கடலோரப் பாதுகாப்புப்படைக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது மக்கள் நீதி மய்யம்.

மேலும் இச்சாதனை நிகழ்த்திய உலகின் முதல் காவல் படை என்ற பெருமையும் பெற்றுள்ள தமிழக காவல் துறைக்கு கூடுதல் சிறப்பு.

“தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தைச் சேர்ந்த 21 காவலர்கள் 3 பாய்மரப் படகுகள் மூலம் சென்னையிலிருந்து கடல் வழியே ராமேஸ்வரம் சென்று, மீண்டும் சென்னை திரும்பியுள்ளனர். மீனவர்கள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான இப்பயணம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது பாராட்டுக்குரியது.

இச்சாதனை நிகழ்த்திய உலகின் முதல் காவல் படை என்ற பெருமையைப் பெற்றுள்ள தமிழ்நாடு காவல் துறையை மக்கள் நீதி மய்யம் வாழ்த்துகிறது. கடலோரப் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தி, தமிழக மீனவர்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாக்கும் பணியில் இன்னும் சிறப்பாகச் செயல்பட வலியுறுத்துகிறோம்.” – மக்கள் நீதி மய்யம்