ஆகஸ்ட் 15, 2024

மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் நமது தேசத்தின் 78-ஆம் ஆண்டு சுதந்திரதின கொண்டாட்டம். துணைத்தலைவர் தலைமையில் மாநில செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், பள்ளிக் குழந்தைகள் திரளாக சூழ வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

நமது இந்திய தேசத்தின் 78 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனையொட்டி மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் மிக சிறப்பாக சுதந்திர நாள் விழாவை பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொள்ள அவர்களுக்கு இனிப்பு மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கி சுதந்திரம் பெற்றது எப்படி என்றும் அதன் சிறப்பு மற்றும் அதனை நாம் போற்ற வேண்டியது குறித்தும் உரையாற்ற சிறப்பாக நடைபெற்றது.

“நமது தேசத்தின் 78-ஆம் ஆண்டு சுதந்திரதின கொண்டாட்டம் இன்று நமது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் மிகச்சிறப்புடன் கொண்டாடப்பட்டது. கட்சி துணைத்தலைவர் திரு. A.G.மௌரியா IPS(Rtd) அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திரதின பேருரையாற்றினார். அத்துடன் அனைவருக்கும் இனிப்பு வழங்கி, குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. விழாவில், மாநில நிர்வாகிகள் திரு.செந்தில் ஆறுமுகம், திரு.நாகராஜன், திரு.முரளி அப்பாஸ், திரு.அர்ஜூனர், திரு.ராகேஷ், திருமதி.ஸ்னேஹா மோகன்தாஸ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.”மக்கள் நீதி மய்யம்