கோபிசெட்டிபாளையம் : ஏப்ரல் 24, 2023

ஈரோடு வடகிழக்கு மாவட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பில் புதிய நிர்வாகிகள் அறிமுகம் & ஆலோசனை கூட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் 23.04.2023 மாலையில், துணைத் தலைவர் திரு. தங்கவேலு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மண்டல அமைப்பாளர்கள் திருமதி.அருணா, திருமதி. ரம்யா வேணுகோபால், திரு.சித்திக், திருமதி.மஞ்சுளா, திரு.ஸ்ரீதர் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் திரு.சத்தியநாராயணன், திரு.சிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர்கள் திரு.சிவகுமார், திரு.பிரகாஷ், திரு.பழனிவேலு, திரு.டோனி, திரு.கார்த்திகேயன் செய்திருந்தனர். – மக்கள் நீதி மய்யம்