ஆகஸ்ட் : 25, 2௦23

தமிழகத்தில் நடைபெற்ற தொடர்ச்சியான பல்வேறு கட்சிகளின் ஆட்சியில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயிலும் அரசு பள்ளிகளில் மதிய வேளைகளில் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. பெருந்தலைவர் திரு காமராஜர் ஆட்சிக்காலம் தொடங்கி பேரறிஞர் அண்ணா, திரு கலைஞர் மு.கருணாநிதி, திரு.எம்.ஜி.ராமச்சந்திரன், செல்வி ஜெ. ஜெயலலிதா, மற்றும் தற்போது ஆட்சியில் உள்ள திரு மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடந்துவரும் ஆட்சியில் காலைச் சிற்றுண்டி வழங்கப்படும் என்ற அறிவிப்பினை தொடர்ந்து தமிழகம் முழுதும் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் பயிலும் சுமார் 17 லட்சம் மாணவ மாணவியர்கள் இதன் மூலம் பயனடைவர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.

இதனை மனமுவந்து வரவேற்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார். மேலும் வழங்கப்படும் காலைச் சிற்றுண்டியுடன் சத்தான சிறுதானியம்நாட்டு ரக பழவகைகளையும் கொள்முதல் செய்து இத்திட்டத்துடன் பயன்படுத்தினால் மாணவர்களுக்கு சத்தான சுவையான உணவு கிடைக்கும். தமிழக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதால் அவர்களும் பொருளாதார ரீதியாக பயனடைவார்கள் என பரந்துபட்ட எண்ணம் மூலம் தமிழக அரசிடம் இது குறித்து ஆராய வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்திய மாநிலங்களிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் 17 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெற இருக்கிறார்கள். இதனால் வரும்கால தலைமுறை மாணவர்கள் பசியின்றி படித்து முன்னேற முடியும். இந்தச் சாதனையைச் சாத்தியமாக்கிய தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாரம்பரிய நெல் ரகங்களையும், ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களையும், நாட்டு ரக பழவர்க்கங்களையும் சாகுபடி செய்யும் தமிழக விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து இத்திட்டத்தில் பயன்படுத்தினால் மாணவர்களுக்குச் சத்தான சுவையான உணவும் கிடைக்கும். விவசாயிகளின் நலன்களும் பாதுகாக்கப்படும். இதன் மூலம் பாரம்பரிய நெல் வகைகளும், தானியங்களும் பாதுகாக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டில் அதிகம் இடம்பெறவும் வாய்ப்புண்டு. இதன் சாத்தியங்களையும் தமிழக அரசு ஆராய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

@CMOTamilnadu #TNBreakfastScheme