சென்னை : ஆகஸ்ட் 02, 2024

கேரள மாநிலம் வயநாடு பகுதி பெரும் மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உருக்குலைந்தது. இருநூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர்.

இப்பெரும்துயரில் இருந்து மீள பொருளாதார உதவிகள் தேவைபடுவதாக கேரள முதல்வர் திரு.பினராயி விஜயன் அனைவரிடமும் கேட்டுக் கொண்டார். அவரவரால் இயன்ற உதவிகளை வங்கிப் பரிமாற்றம் மூலமாகவும், உடை, உணவு போன்ற உதவிகளையும் செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதன் பொருட்டு அண்டை மாநிலங்கள் உட்பட பல இடங்களில் இருந்தும் வயநாடு பேரிடர் நிவாரண நிதிகளை முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதி வங்கிக் கணக்கிற்கு செலுத்தி வருகின்றனர். அவ்வகையில் மனிதநேய பண்பாளர் ஆன தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக பாதிக்கப்பட்டவர்களின் துயர் துடைக்க இருபத்தைந்து லட்சம் ரூபாய்கள் கேரள அரசின் முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.

தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் நன்கொடைக்கும் மற்றும் இதுவரை நிவாரண நிதி அளித்த, அளித்துவரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி நவில்கிறது. “மய்யத்தமிழர்கள்.com” நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

நமது இணையதளத்தின் முந்தைய பதிவு :

நன்றி : மக்கள் நீதி மய்யம் & செய்தி நாளிதழ் & சமூக ஊடக இணையதளங்கள்