பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசுப் பேருந்துகளால், கடலூர்,ஓசூரில் பள்ளி மாணவர்கள் இருவர் ஓடும்பேருந்திலிருந்து குதித்து உயிரிழந்துள்ளனர்.

இன்னுமோர் உயிர் பிரிவதற்கு முன்பு மநீம முன்வைத்த (24/11/21) “மாணவர் சிறப்புப்பேருந்து” கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்

அரசுப்பேருந்துகளில் பயணம் செய்வோரின் கண்ணியமும், பாதுகாப்பும் பாதிக்கப்படும் நிகழ்வுகள்‌ அடிக்கடி நடக்கின்றன. சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும், தமிழக முதல்வரும் இவ்வகை அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.