சரியான வருமானம் இல்லாமல் வசதியின்றி தவிக்கும் ஒருவருக்கு மீன்கள் தானமாக அளிப்பதை விட அவருக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தந்து அதற்கான உபகரணங்களை வழங்கினால் அதுவே மிகச்சிறந்த வழியாகும் என்பார்கள்.

நமது தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் நன்கொடைகள் அளிப்பதை முன்னிட்டு, அதை செயல்படுத்தும் வகையில் மக்கள் நீதி மய்யம் வடசென்னை மத்திய மாவட்ட செயலாளர் வி உதயகுமார் அவர்களின் முயற்சியால் அப்படி வருமானம் இல்லாமல் தவிக்கும் ஒரு குடும்பம் வணிகம் செய்து பொருளீட்ட நடமாடும் நான்கு சக்கர வாகனம் ஒன்றை இலவசமாக அளித்தார், அந்நிகழ்வின்போது உடனிருந்தனர் மய்யம் நிர்வாகிகள்.