பெரம்பூர் : ஜனவரி 13, 2026

மக்கள் நீதி மய்யம் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் வழிகாட்டுதல்படியும் நேர்மையான அரசியலை முன்னெடுத்து வருவதை தொடர்ந்து பெரம்பூர் ம.நீ.ம மாவட்ட செயலாளர் திரு.V. உதயகுமார் அவர்கள் செயலாற்றி வருகிறார். மேலும் ஒவ்வொரு நேரமும் நிர்வாகிகளுக்கு மற்றும் அப்பகுதி எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறார்.

அவ்வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பெரம்பூர் மாவட்ட செயலாளரான திரு.V.உதயகுமார் அவர்கள், துணைச் செயலாளர், பொருளாளர், மாவட்ட அணி அமைப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், நகர செயலாளர்கள், கிளை மற்றும் வட்டச் செயலாளர்கள் உட்பட அனைத்து நிர்வாகிகளுக்கும் மற்றும் நம்மவர் தொழிற்சங்க பேரவை மாநில துணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் தமிழர் திருநாளான பொங்கல் விழாவினை முன்னிட்டு பரிசுத் தொகுப்பினை வழங்கி உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். மேலும் தலைவரின் மானசீக வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

அழகிய இந்நிகழ்வில் சென்னை மண்டல செயலாளர் திரு.மயில்வாகனன் அவர்களும் பங்கேற்று பரிசுத் தொகுப்பினை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். நிர்வாகிகளும் மாவட்டச் செயலாளர் மற்றும் மண்டல செயலாளர் ஆகிய இருவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரம்பூர் – திரு.வி.க. நகர் மய்ய நிர்வாகிகளுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா !

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,

சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் அவர்களின் தலைமையில்,

பெரம்பூர் – திரு.வி.க. நகர் மாவட்டச் செயலாளர் திரு.V.உதயகுமார் அவர்களின் ஏற்பாட்டில்,

பெரம்பூர் – திரு.வி.க. நகர் மநீம மாவட்டத்தின் அனைத்து மய்ய நிர்வாகிகளுக்கும் பொங்கல் பரிசு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்டப் பொருளாளர் திரு. ஆனந்த், நகரச் செயலாளர்கள் திருமதி. ரேவதி, திரு. ரமேஷ், திரு. வாசன் ஆகியொரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில்,

மாவட்டத் துணைச் செயலாளர் திரு. கணேசன், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் திரு. கருணாநிதி, திரு. இராஜபுத்திரன், திருமதி. அம்ருத மோகனா, நகரச் செயலாளர்கள் திரு. கமல் தரம்குமார், வட்டச் செயலாளர்கள் திரு. ஜானகிராமன், திரு. கார்த்திக், திரு. பாஸ்கர், திரு. ஏகாம்பரம், திரு. கமலக்கண்ணன், அணிகளின் நகர அமைப்பாளர் திருமதி. காதம்பரி, கிளைச் செயலாளர்கள் திரு. கணேஷ்குமார், திரு. தினேஷ் குமார், திரு. செந்தில், திரு. வேலன், திரு. கோபி, திரு. ரமேஷ், திரு. நாக மணிகண்டன், திரு. ராஜ்கமல், திரு. தேவராஜ், திரு. தேவநாயகம், திரு. ஆனந்த் பாபு, திரு. சேகர், திரு. ஜெயராம், திரு. ஜெயக்குமார், திரு. அசோக், திரு. தியாகராஜன், திரு. பத்மநாபன், திரு. விநாயகம், திரு. தங்கராஜ், திரு. செந்தில், திரு. தங்கராஜ், திரு. வடிவேல், திருமதி. லட்சுமி, திருமதி. அனிதா, திருமதி. கஸ்தூரி, திருமதி. பர்கத், திருமதி. செல்வி, திருமதி. ராதா, திருமதி. நிவேதா, திருமதி. சிவகாமி, திருமதி. கீர்த்தனா, திருமதி. கோமளா, திருமதி. கிரிஜா, திருமதி. லட்சுமி, திருமதி. நவீனா, திருமதி. காதம்பரி, திருமதி. வாணி, திருமதி. அமுதா, திருமதி. மாத்தாள், திருமதி. விக்டர், திருமதி. பத்மாவதி, திருமதி. ஸ்ருதி, திருமதி. பிரேமா, திருமதி. வளர்மதி. திருமதி. இலக்கியா மற்றும் நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநில துணை ஒருங்கிணைப்பாளர் திரு. யுவராஜ் ஆகியோருடன் மாவட்ட, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். – மக்கள் நீதி மய்யம்

நன்றி : மக்கள் நீதி மய்யம்