சென்னை : செப்டெம்பர் 12, 2024

மக்கள் நீதி மய்யம் கட்சி ஏழாம் ஆண்டில் நடைபோட்டு வருகிறது. நேர்மையான தூய்மையான அரசியலை முன்னெடுக்கும் மக்களின் தலைவரான நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நிர்வாகிகளும் தொண்டர்களும் தன்னலம் பாராமல் மக்களுக்கான அரசியலில், அவர்களுக்கான நற்பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல்களில் பங்குகொண்டு வெற்றி வாய்ப்பை தவற விட்டாலும் அதற்கடுத்த கட்டத்தில் அரசியல் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. வருகின்ற 21 ஆம் தேதியன்று தலைவரின் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மய்யம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சியின் வளர்ச்சிக்கு நிதியளித்து வருவது மெச்சத்தக்கது. அவ்வகையில் நற்பணி இயக்க (முன்னாள்) நிர்வாகி, மாவட்ட துணைச்செயலாளர் மற்றும் பொறியாளர் அணியின் காஞ்சி மண்டல அமைப்பாளர் ஆகியோர் இன்று தலைமை அலுவலகத்தில் தலைவரை நேரில் சந்தித்து கட்சி வளர்ச்சி நிதியாக அளித்தனர். தலைவரும் பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தார்.

“தலைவர் நம்மவரிடம் கட்சி வளர்ச்சி நிதியளித்த நம்மவர்கள் !! மக்கள் நீதி மய்யம் தலைமை நிலையத்தில், தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்களிடம், நற்பணி இயக்க முன்னாள் நிர்வாகி (மதுரை) திரு. பன்னீர்செல்வம், மதுரை மேற்கு மநீம மாவட்ட செயலாளர் திரு. முத்துக்கிருஷ்ணன் மற்றும் பொறியாளர் அணி காஞ்சி மண்டல அமைப்பாளர் திரு. அரவிந்த்ராஜ் ஆகியோர் கட்சி வளர்ச்சி நிதியளித்தனர்.மக்கள் நீதி மய்யம்

நன்றி : மக்கள் நீதி மய்யம்