செப்டெம்பர் – 15, 2024

தமிழ்நாடு என பெயர் சூட்டிய புகழ் மறைந்த நமது முன்னாள் முதல்வர் திரு. அண்ணாதுரை அவர்களின் பிறந்த நாளான இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் பேரறிஞரின் மடியில் அமர்ந்து விளையாடிய நிகழ்வை தனது மூத்த தமக்கையின் வாயிலாக தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். எந்தவொரு மேடையிலும் பல அரசியல் தலைவர்களுடன், முதல்வர்களுடனும் பழகியும் உள்ளதை சிலாகித்து குறிப்பிட்டுள்ளார்.

“பல முதல்வர்களோடு பழகியிருக்கிறேன்; பார்த்திருக்கிறேன். இந்த வகையில் என் மனதோரம் ஒரு குறை இருந்தது. பேரறிஞர் அண்ணா அவர்களைப் பார்த்ததும், அவரது வெள்ளம் போன்ற மேடை உரையை நேரடியாகக் கேட்டதும் இல்லை என்கிற குறை. அவருடனான என் தொடர்பெல்லாம் அவரின் எழுத்துக்களை வாசிப்பதன் மூலமாகத்தான் அமைந்தது. இன்றைய அவரது பிறந்தநாளில் அவரை வாழ்த்தும் நேரத்தில் முன்பொரு நிகழ்ச்சியில் என் அக்கா சொன்ன இந்த இனிய சம்பவம் நினைவுக்கு வந்தது. பேரறிஞர் அண்ணா புகழ் ஓங்குக.” – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்