சென்னை : செப்டம்பர் 21, 2024

2018 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட கட்சி மக்கள் நீதி மய்யம். அதன் பொதுக்குழுவானது இன்று சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள காமராஜர் அரங்கத்தில் கூடியது. நிர்வாகக்குழு, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமாக கலந்து கொண்டனர். அவ்வேளையில் அரங்கம் முழுதும் திருவிழா கோலம் கொண்டது. இரண்டாவது முறையாக கூட்டப்பட்ட பொதுக்குழுவில் அனைத்து பிரதிநிதிகளின் ஒப்புதலோடு ஏகமனதாக கட்சியின் தலைவராக திரு.கமல்ஹாசன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். அப்போது எழுந்த கரகோஷம் அரங்கத்தை அதிர வைத்தது எனலாம். முதல் தீர்மானமாக தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டது முதல் அதையொட்டி அடுத்தடுத்து பல முக்கிய தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

“இன்று (21-09-2024) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்ற நமது கட்சியின் இரண்டாவது பொதுக்குழுக் கூட்டத்தில், நமது தலைவர், நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக்குழு உறுப்பினர்கள் விண்ணதிர கரகோசம் எழுப்பி நமது தலைவரை வாழ்த்தி மகிழ்ந்தனர்.”மக்கள் நீதி மய்யம்

நன்றி : மக்கள் நீதி மய்யம் & செய்திகள் சமூக ஊடகங்கள்