சென்னை : அக்டோபர் 20, 2024

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ தொழிற்சங்கம் நம்மவர் தொழிற்சங்க பேரவை துவக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்று ஐந்தாம் ஆண்டு தொடக்கவிழா இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. துணைத்தலைவர் திரு. மௌரியா அவர்கள் ந.தொ.ச.பே யின் கொடி ஏற்றி விழாவினை துவக்கி வைத்தார். அதே சமயம் பொதுச்செயலாளர் திரு.அருணாச்சலம் அவர்கள் தொழிற்சங்க பேரவையின் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார். மற்றும் கட்சியின் இதர அணிகளைச் சேர்ந்த மாநில செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பலரும் கலந்து கொண்டது மேலும்சிறப்பு.

இவ்விழாவில் நம்மவர் தொழிற்சங்க பேரவையின் நான்காம் ஆண்டு பொதுக்குழு கூட்டமும், அக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவராக திரு.கமல்ஹாசன் அவர்கள் மீண்டும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி அறிவிப்பு தீர்மானம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் அவரது வழிகாட்டலுடன் கட்சியின் துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், மாநில செயலாளர்கள் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கு கொண்டு சிறப்பித்தனர். நம்மவர் தொழிற்சங்க பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. சொக்கர் அவர்களின் தலைமையில், பேரவையின் மாநில பொதுச்செயலாளர் திரு.ரவிச்சந்திரன், பேரவை மாநில துணை ஒருங்கிணைப்பாளர் திரு.K.மாடசாமி, பேரவை துணை செயலாளர் திரு.M.K.ராஜன் ஆகியோர் முன்னிலை வகிக்க, வந்திருந்த விருந்தினர்களை உளம் கனிந்து வரவேற்புரையாற்றினார் பேரவையின் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் திரு.குணசேகரன் அவர்கள். தொழிற்சங்க பேரவையின் மாநில & மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா நிறைவில் பேரவையின் மாநில துணைச்செயலாளர் திரு.ராஜு அவர்கள் நன்றியுரையாற்றினார்.

நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் 4-ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம், 5-ஆம் ஆண்டு தொடக்க விழா, புதிய அலுவலகத் திறப்பு விழா ஆகியவை உள்ளிட்ட முப்பெரும் விழா சென்னையில் இன்று (20.10.2024) சிறப்பாக நடைபெற்றது. தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், இணைப்புச் சங்க நிர்வாகிகள், மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்ட இந்நிகழ்வுகளில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.” – மக்கள் நீதி மய்யம்

“நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் 4-ம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று (20.10.2024) நடைபெற்றது. பேரவையின் மாநில பொதுச் செயலாளர் திரு.V.ரவிச்சந்திரன் அவர்களின் வரவேற்புரையுடன் துவங்கிய இந்நிகழ்விற்கு, பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. சொக்கர் அவர்கள் தலைமை வகித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு. மௌரியா அவர்கள், பொதுச் செயலாளர் திரு.அருணாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வாழ்த்துச் செய்தியை, மாநிலச் செயலாளர் திரு.செந்தில் ஆறுமுகம் அவர்கள் வாசித்தார். கட்சியின் துணைத் தலைவர் திரு. மௌரியா, நற்பணி அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நாகராஜன், மாநிலச் செயலாளர்கள் திரு.முரளி அப்பாஸ், திரு.வைத்தீஸ்வரன், திருமதி.ஸ்னேகாமோகன்தாஸ், மாவட்டச் செயலாளர்கள் திரு.பாசில், திரு.கமல் மாறன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பேரவையின் மாநில பொருளாளர் திருமதி.M.பானுமதி, மாநில துணை ஒருங்கிணைப்பாளர்கள் திரு.K.மாடசாமி, திரு.P.குணசேகரன், திரு.B.மாணிக்கராஜ், திரு.G.ரவிச்சந்திரன், திரு.P.S.சரவணன், திருமதி.A.பானுமதி, மாநில துணைச் செயலாளர்கள் திரு.M.K.ராஜன், திரு.A.ராஜூ, திருமதி.S.சாந்தி, திரு.M.புகழ் முருகன், திரு.D.சங்கர், திரு.V.யுவராஜ், R.கார்த்திகேயன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் திரு.V.வெனின், திரு.S.ரமேஷ், R.ஜெகன், திரு.D. பிரசாத் உள்ளிட்ட நிர்வாகிகளும், இணைப்புச் சங்க நிர்வாகிகள் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், மநீம தலைவராக நம்மவர் உயர்திரு. கமல் ஹாசன் அவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பாராட்டுத் தெரிவித்தல், 234 தொகுதிகளிலும் தொழிற்சங்கங்களை ஏற்படுத்தி, பேரவையுடன் இணைத்தல், அரசு, தனியார் துறைகளில் தொழிற்சங்கங்களை தொடங்குதல், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான உரிமைகள், சலுகைகளைப் பெற்றுத் தருதல், நவம்பர் 7-ம் தேதி நம்மவர் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுதல் மற்றும் ஐசிஎஃப் தொழிற்சாலையில் நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. – நம்மவர் தொழிற்சங்க பேரவை

நன்றி : மக்கள் நீதி மய்யம், நம்மவர் தொழிற்சங்க பேரவை