செப்டம்பர் 29, 2025

மக்கள் நீதி மய்யம் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் திரு.கமல்ஹாசன் அவர்களின் நற்பணி அனைவரும் அறிந்ததே. அவ்வழியிலேயே அவரது விசுவாசிகளும் நிர்வாகிகளும் தொடர்ந்து நற்பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதற்கு சான்று ஒவ்வொரு நாளும் தொடர்கிறது.

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,

நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் திரு. K. மாடசாமி, வில்லிவாக்கம் மநீம மாவட்டத் துணைச் செயலாளர் திரு.விஸ்வநாதன், மாவட்டப் பொருளாளர் திரு.ஹரிதாஸ் ஆகியோரின் தலைமையில்,

வில்லிவாக்கம் மநீம மாவட்டம் அயனாவரம் பகுதியில் மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் திருமதி.ஹேமா உமாபதி அவர்களின் ஏற்பாட்டில், மகளிர் அணி மாநிலச் செயலாளர் திருமதி.சினேகா மோகன்தாஸ் மற்றும் பொறியாளர் அணி சென்னை மண்டல அமைப்பாளர் திரு.P.சரவணக்குமார் ஆகியோரின் முன்னிலையில், பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

நிகழ்வில் நகரச் செயலாளர்கள் திரு. மு.ரமேஷ் காந்தி, திரு. சரவணன், திருமதி. வாணி, வட்ட செயலாளர்கள் திருமதி.தீபா, திரு.மோகன், திரு. லட்சுமணன், கிளை செயலாளர்கள் திரு.அசோகன், மய்ய உறுப்பினர்கள் திரு. முருகன், திருமதி. கவிதா, திருமதி. லேனா ஜான்சி, திரு. குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். – மக்கள் நீதி மய்யம்

நன்றி : மக்கள் நீதி மய்யம்