புது தில்லி டிசம்பர் 2௦, 2௦22

டெல்லியில் நடைபெற்ற 22-வது தேசிய பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த நந்தினி நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கம், பிரவீன்குமார் ஈட்டி எறிதல், பார்த்திபன் 800 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கங்களை வென்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

தேசியப் போட்டியில் பதக்கங்கள் வென்று சாதித்த வீரர், வீராங்கனைகளுக்கும், அவர்களை ஊக்குவித்த தமிழ்நாடு அமெச்சூர் பார்வையற்றோர் விளையாட்டுச் சங்கத்துக்கும் மக்கள் நீதி மய்யம் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், இன்னும் பல வெற்றிச் சிகரங்களை அடைய வாழ்த்துகிறது. – மக்கள் நீதி மய்யம்