சென்னை : செப்டம்பர் 17, 2024

தீண்டாமை, சாத்திய பாகுபாடு, மூடநம்பிக்கைகள், பெண் விடுதலை பகுத்தறிவு பேசிய தந்தை பெரியார் இன்னும் எத்தனை எத்தனை ஆண்டுகள் ஆயினும் அவரது தாக்கத்தை, அவரது கருத்துக்களை எவரும் மறுக்கவும் மறக்கவும் முடியாது என்பது அசைக்கமுடியாத உண்மை. தமிழகத்தின் மிகச்சிறந்த தலைவர்களில் தந்தை பெரியாரின் பெயரை சேர்க்க முடியாமல் தவிர்க்கவே முடியாது. பெரியாரை முன்மொழிந்தும் வழிமொழிந்தும் வருபவர்களில் முக்கியமான ஒருவர் நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள். பிறர் சொல்லும் எதையும் ஏன் எதற்கு எப்படி என கேள்வி எழுப்பும் உரத்த சிந்தனை கொண்ட அரசியல் தலைவர்களில் ஒருவரான நம்மவர் அவர்கள் பெரியாரின் பிறந்த நாளிற்கு தமது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

“சமத்துவம், சமூகநீதி, தீண்டாமை, பெண் விடுதலை, பகுத்தறிவு, அரசியல், அறிவியல் என அனைத்திலும் முன்னோக்கிச் சிந்தித்தவர் தந்தை பெரியார். முற்போக்குச் சிந்தனைகளை மக்களின் மனங்களில் விதைக்க தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்ட பெருமகனாரின் பிறந்தநாளில் அவரது கருத்துகளை உள்ளம் ஏந்துவோம்.” – திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

நன்றி : மக்கள் நீதி மய்யம்

#ThandhaiPeriyar | #PeriyarForever | #KamalHaasan | #NeoPolityCulturist | #Centrism | #Maiam | #MNM

நன்றி : மக்கள் நீதி மய்யம்