செப்டம்பர் 02, 2025

அமெரிக்க அரசின் 50% வரி விதிப்பினால் நமது தமிழகத்தின் தொழில் நகரமான திருப்பூர் மற்றும் ஏனைய தொழில் நகரங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் உற்பத்திகள் பாதிப்படைந்ததும் ஏற்றுமதிகள் ஸ்தம்பித்து நிற்பது குறித்து எந்தக் கவலையுமில்லாமல் மெத்தனப் போக்கினை கடைபிடிக்கும் ஆளும் பிஜேபி ஒன்றிய அரசை கண்டித்து இந்தியா ப்ளாக் கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தது மக்கள் நீதி மய்யம் கட்சி.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு.

அமெரிக்க அரசின் 50% வரி விதிப்பால் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ள திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களை கண்டுகொள்ளாமல் கைவிட்ட ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக இன்று (02-09-2025) காலை திருப்பூர் ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்,

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், மாநிலங்களை உறுப்பினர் திரு.கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி,

கட்சியின் துணைத் தலைவர் திரு.தங்கவேலு அவர்களின் தலைமையில், கோவை மண்டலச் செயலாளர் திரு.ரங்கநாதன், மாநிலச் செயலாளர்கள் திரு. மயில்சாமி, திரு.சிட்கோ சிவா, திருமதி.மூகாம்பிகா ரத்னம், திருமதி.பத்மா ரவிச்சந்திரன்,

கோவை மண்டல சார்பு அணியின் அமைப்பாளர்கள் திரு. சித்திக், திரு. செவ்வேள், திரு. தாஜுதீன், திரு. ஸ்ரீதர், திருமதி. கலையரசி (மதுரை மண்டலம்), கோவை மண்டல மாவட்டச் செயலாளர்கள் திரு. ஜீவா – திருப்பூர் வடக்கு, திரு. மகேந்திரன் – திருப்பூர் தெற்கு, திரு. சுரேஷ் – அவிநாசி, திரு. ராஜா முகமது – தாராபுரம், திரு. பிரபு – கோவை தெற்கு, திரு. மயில் கணேஷ் – சிங்காநல்லூர், திரு. சிவகுமார் – கோபிசெட்டிபாளையம், திரு. வரதராஜ் – சூலூர், திரு. குரு – உடுமலைப்பேட்டை, திரு. ஜாகிர் உசேன் – உதகமண்டலம், திரு. செல்வராஜ் – காங்கேயம், திரு. முருகன் – பெருந்துறை, திரு. முஜிபூர் ரஹ்மான் – வால்பாறை, திரு. தனவேந்திரன் – கோவை வடக்கு, மாவட்டத் துணைச் செயலாளர் திரு. ஜெகதீஷ் – பொள்ளாச்சி மற்றும் மய்ய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். – மக்கள் நீதி மய்யம்

#KamalHaasan#KamalHaasan_MP#MakkalNeedhiMaiam

நன்றி : மக்கள் நீதி மய்யம்