சென்னை : அக்டோபர் 10, 2024

தமிழகத்தின் பிரபல நாளிதழான முரசொலி மறைந்த முன்னாள் முதல்வர் திரு.கலைஞர் அவர்கள் நிறுவிய தமிழ் நாளிதழ். அதன் அதிகாரப்பூர்வ நிர்வாக ஆசிரியரான திரு. முரசொலி செல்வம் அவர்கள் கலைஞரின் மருமகனும் கூட. 84 வயதான திரு.முரசொலி செல்வம் அவர்கள் இன்று காலமானார். அன்னாரது மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் தமது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

“என்னுடைய இனிய நண்பர் திரு. முரசொலி செல்வம் மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. பத்திரிகை ஆசிரியராக அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக திராவிடக் கருத்தியலைச் சுமந்தவர். திரைப்படத் துறையிலும் பங்களிப்பாற்றியவர். எல்லாவற்றுக்கும் மேலாக நட்புக்கு மரியாதை அளிக்கிற நல்ல மனிதர். திரு. முரசொலி செல்வம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

நன்றி : தலைவர் திரு.கமல்ஹாசன், ம.நீ.ம & சமூக ஊடக இணையதளம்